வெள்ளி, 6 மார்ச், 2020

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மார்ச் 10 ம் தேதி ..

Arun Prakash : தோழர்களுக்கு வணக்கம்... அன்னை மணியம்மை குறித்து பெரும்பாலும் நாம் அறிந்திருப்போம். சென்ற ஆண்டு மார்ச் 10ம் தேதி அவர்களது பிறந்தநாள் மணியம்மை நூற்றாண்டு விழாவாக மாதம் முழுவதும் சிறப்பாய் கொண்டாடினோம்.
இந்த வருடம் மார்ச் 10 ம் தேதி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும்  அவர்களை பற்றிய  செய்திகளை  படித்து  பதிவிடலாம் என முடிவு செய்துள்ளோம். தோழர்கள் அனைவரும் இதை முயற்சி செய்தால் மகிழ்ச்சி.

இன்று மணியம்மை அவர்கள் குறித்து ஒரு அறிமுகம் மட்டும் #02_03_2020
பெரியாருடன் குற்றாலத்திலும், ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின்  இயக்கக்  காரியங்களைப் பார்க்கத்  தகுந்த  முழு  மாதக்காலமும்  முழுக்  கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா..??  என்ற கவலையிலேயே இருக்கிறார்.’’
1943-ம் ஆண்டு குடியரசு ஏட்டில் மணியம்மை_எழுதியதில்_உள்ள_வரிகள் இவை. இந்த வரிகளில் தென்படுவது மணியம்மையின் உண்மையான அக்கறை.

அந்த அக்கறைதான் 1973-ம் ஆண்டு வரை, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பெரியாருடன் பயணித்து, அவரை நன்கு கவனித்துக்கொண்டும் இயக்க வேலைகளைப் பார்க்கவும் வைத்தது. மணியம்மை போன்ற அர்ப்பணிப்பு மிக்க ஒருவரை நாம் காண்பது அரிது.
1920-ம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணியம்மையின் இயற்பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா, பத்மாவதி. வேலூர், கொசப்பேட்டை, அரசு பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார். காந்திமதியின் அப்பா, பெரியார் ஆதரவாளர். பெரியார் அந்தப் பகுதிக்கு வந்தால், இவர்களின் வீட்டில்தான் தங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. காந்திமதியின் அப்பா, பெரியாருக்கு அடிக்கடி கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர். அப்படி ஒருமுறை, `உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று எழுதியிருந்தார். அதற்குப் பெரியார் எழுதிய பதில் கடிதத்தில், `` `எல்லோரும் தூர  இருந்தபடி உடம்பை  ஜாக்கிரதையாகப்_பார்த்துக்_கொள்ளுங்கள்_என்கிறார்கள்.
ஆனால், கூட_இருந்து உதவிசெய்ய யாருமில்லை. என்னவோ, என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்.
அது கனசபையை என்னவோ செய்தது, மகள் காந்திமதியை பெரியாரிடம் அழைத்துவந்து, இந்தப் பெண் கூட இருந்து தொண்டு செய்யட்டும்’ என்று கூறினார்.


அன்னை மணியம்மை 😍😍😘 பெரியாரின் கூட்டங்களில், புத்தகங்களை விற்பனை செய்து, அதற்கான கணக்கு வழக்குகளை மிகச் சரியாக ஒப்படைப்பவர் மணியம்மை. மேலும், பெரியார் பேசுவதைக் குறிப்பெடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமான கட்டுரையாக்குவதிலும் திறமை மிக்கவர். ஒரு கட்டத்தில் பெரியாரின் உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருக்க, இயக்கத்தை வழிநடத்தும் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தார். மணியம்மைதான் அதற்குத் தகுதியானவர் என்றதும், வாரிசாக்க_அப்போதைய_சட்டம்_இடம்_அளிக்காததால்_திருமணம்_செய்துகொண்டார். அதைச் #சட்டப்படியான_ஒரு_ஏற்பாடு_அவ்வளவுதான் என்றே பெரியார் குறிப்பிடுகிறார். இந்தத் திருமணத்தால், மணியம்மை பலரிடமிருந்து வசைச் சொற்களைக் கேட்க வேண்டியிருந்தது. ஆயினும் தனது செயலில் சமூகத்துக்கான நியாயம் இருப்பதால், அவை எதுவுமே அவரை வீழ்த்திவிட வில்லை. பெரியாரின் உடல்நிலையின்மீது எப்போதும் கவனத்தோடு இருப்பார். #மருத்துவரின்_ஆலோசனைபடியே_உணவுகளை_வழங்குவார். பெரியாரின் நண்பர்கள், தொண்டர்கள் ஆசையோடு அவருக்குச் சாப்பிடக் கொடுத்தாலும், கண்டிப்போடு தவிர்க்க வைத்துவிடுவார். ஒருமுறை, மணியம்மைக்குத் தெரியாமல் பெரியாருக்குப் பிரியாணியை அவர் நண்பர் தந்துவிட, உடலுக்கு என்னவாகுமோ என்று பதறிப்போனார். இன்னும் சொல்லப்போனால்

ஒரு_குழந்தையைப்_பார்த்துக்கொள்வதைப்போல,பெரியாரைக் கவனித்துக்கொண்டார். பெரியாரும்_மணியம்மையை_அம்மா_என்றே_அழைத்தார். ஒருமுறை பெரியார், ``#இந்த_வயதிலும்_நான்_சாகாமல்_இருக்கிறேன்_என்றால்.., #இந்த_அம்மாவால்_தான்_என்பது_யாருக்கும்_தெரியாது". எனது உடம்புக்கு ஏற்ற உணவைப் பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான்’’ என்று மணியம்மையைப் பற்றிச் சொல்கிறார் என்றால், மணியம்மையின் பணி எவ்வளவு அர்ப்பணிப்பு மிக்கதாக இருந்திருக்க வேண்டும்...??



தோழர் மணியம்மை     அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவு உழைக்கவும், மக்களுக்கு அவர் செய்துவந்த உயிர்நாடி கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத் தன்மையோடு, பண்போடு, உண்மையும்,,, ஒழுக்கமும் உயர்வெனக் காட்டிய வழியிலேயே நாமும் இனி வாழ்நாளெல்லாம் வாழவேண்டும் என்று ஓர் உறுதியான எண்ணத்துடன் இன்று முதல் செயல்படத் தொடங்கி விட்டேன். இனி எனக்கென்று எந்தவிதமான சுயநலப்பற்றும், பாசமும், பந்தமும் இல்லாத மனநிறைவோடு மனிதப் பற்றோடு வாழ்வை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு என்னை ஆளாக்கிக்கொண்டேன். 4.1.1974

கருத்துகள் இல்லை: