செவ்வாய், 27 ஜூன், 2017

தெலுங்கில் 4 கோடி கேட்கும் நயன்தாரா

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக
நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் சி.கல்யாண் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே நயன்தாரா, ‘சிம்மா’, ‘ஸ்ரீராமராஜ்யம்’ படங்களில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இது அவருடன் நடிக்கும் 3-வது படம். இதில் நடிக்க நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் அதுபற்றி கவலைப்படாமல் இதில் அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.மாலைமலர்

கருத்துகள் இல்லை: