செவ்வாய், 26 நவம்பர், 2019

மலையக மக்களை தோட்டக்காட்டான் என டிவி விவாதத்தில் .. ... மனோ கணேசன் கோபத்தில் தண்ணீர் கோப்பயை வீசி எறிந்தார் வீடியோ


Esther Nathaniel : "தோட்டக்காட்டான் "என்ற கருத்தியலால் எம்மை சுட்டிக்காட்டியது அத்தாவுல்லாதான் என்பது புது விடயமல்ல மனோ கணேசன் அவர்களின் கோபத்தைப் பார்த்து எனக்கு அழுகையும் வந்துவிட்டது இந்த மலையக மக்களுக்காக மட்டுமல்ல மனோ அவர்கள் வடகிழக்கு மற்றும் முஸ்லிம்மக்களுக்கள் சிங்கள மக்களுக்காவும் வேலை செய்தவர் என்பதை மக்கள் அறிவர்.
ஊரை அடிச்சி உலையில் போட்டு வாழும் அத்தாவுல்லாவின் வார்த்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மலையக மக்களை தோட்டக்காட்டான் என முதலில் விளித்ததே யாழ் உயர் குலம்தான் என்பதை நானறிவேன் அதுவே எல்லோரும் சொல்லும் அளவுக்கு இன்று தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது மலையக மக்கள் அந்தளவுக்கு மூட்டாள்கள் அல்ல மற்ற இனத்தை கேவலமாக விழிக்கும் சொற்களை சொல்வதற்குஅதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை காலமும் இல்லை இந்தக் காடுகளை வெட்டி தோட்டங்கள் ஆக்கியிராவிட்டால் எப்படி இந்தநாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டிருக்கும் இன்றுவரைஅவர்கள் உழைப்பில்தான் இந்த நாடு கஞ்சி குடிக்கிறது என்பதை அத்தாவுல்லா மட்டுமல்ல எல்லோரும் அறிதல் நன்றே

தோட்டக்காட்டான் தோட்டக்காட்டான் என்ற கருத்தியலில் மட்டூமல்ல எல்லா வகையிலும் அவர்களை ஓரம் கட்டி அம்மக்களின் அடிப்படை வசதிகளை இன்னும் சரிசெய்வதில் அசமந்தப்போக்கை அரசாங்கமும் அந்த மண்ணிலிருந்து வந்த அரசியல்வாதிகளாலும் இற்றுவரை இயலாதேயுள்ளது.
கடலில் விழுந்தவனுக்கு கட்டுமரத்துண்டு கிட்டி அவன் கரையைத் தேடி திக்குமுக்காடி வந்துச் சேர்வதைப்போல நானெல்லாம் கடுமையான போராட்டம் இழப்பு அனேக நாள் பட்டினி ஆடையின்மை நீண்டதூரம் கால்டையாக நடந்தே இந்த நிலையை அடைய முடிந்தது தோட்டத்துக்கு வரும் பஸ் வராவிட்டால் பாடசாலைக்கே போகமுடியாது பின்னர்பாடசாலை போனால் நான் அதை ஆசிரியரிடம் சொன்னாலும் அதிபரிடம் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை நாள் முழுக்க வெளியில்நிற்பாட்டி வைத்துவிடுவார்கள்
.இப்படியான கடுமையான பாதைகளும் அனுபவங்களும் மலையக மக்களுடையது நீங்கள் சொல்லலாம் நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
வீடு வாசல் சூரையாடப்பட்டவர்கள் துரத்தப்பட்டவர்கள் என்று ஆனால் எல்லோருக்கும் ஒரு தீர்வுக் கிட்டியது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகிடைத்தது நிலம் கிடைத்தது வாழ்வாதாரம் கிடைத்தது சர்வதேச நிறுவனங்கள் அள்ளி இறைத்தது ஆனால் மலையக மக்களுக்கு எவனாவது கிள்ளியேனும் கொடுத்தானா??
மலசலக்கூடம் இல்லாமல் இன்று எனது தோட்டத்து மக்கள் அல்லல்படுகிறார்கள் என்பது அத்தாவுல்லாவுக்கு தெரியுமா ஆறுமுகன் தொண்டமானுக்குத்தான் தெரியுமா??ஆகவே இந்த தோட்டக்காட்டானை யாரும் இலகுவில் மறக்க மாட்டார்கள் அது என்பிள்ளை என் பிள்ளையின் பிள்ளைக்கு பின்னாலே வரும் கருத்தியல் முற்றிலும் கொன்றொழிக்க அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் பாடுபடவேண்டும் நாளை நம்மை பார்த்து தோட்டக்காட்டான் என சொல்லும்போது ஆமாம் தோட்டத்தை காடாக்காமல் காட்டை தோட்டாமாக்கிய எம் மூதாதையர் காடுகளின் ராசாக்களடா என்று மார்தட்ட முடியும் அல்லாவிட்டால் இந்த வார்த்தையை யாழ் சமூகம் மட்டுமல்ல அத்தாவுல்லா மட்டுமல்ல முழு இலங்கையும் எம்முகத்தில் பச்சைக்குத்தி விளையாடும் என்பதில் சந்தேகமே இல்லை

கருத்துகள் இல்லை: