

ஆனால்,
அவர்களின் போதாதகாலம் விசைப்படகில் டீசல் தீர்ந்துவிட்டது. இதனால்
லட்சத்தீவு பகுதியில் படகை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய மீனவர்கள் குமரி
மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் கூறினர். ஏமன் நாட்டிலிருந்து
படகைக் கடத்தி வருவதை அறிந்த உறவினர்கள் பதறிப்போனார்கள். இதுகுறித்து
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சிலுக்குத் தகவல்
கொடுத்தனர். பின்னர் சர்ச்சில் மீனவர்களின் உறவினர்களை அழைத்து நாகர்கோவில்
கலெக்டர் அலுவலகம் வந்தார். லட்சத்தீவில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு
உதவும்படி கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், கடத்திவந்த படகை மீட்க
அரசு உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில்,
"படகை கடத்தி வந்தது தவறான செயல்தான். ஒரு வருடமாக சம்பளம் கொடுக்காததாலும்
அடிமைபோன்று நடத்தியதாலும் எப்படியாவது உயிர் தப்பினால் போதும் என்ற
எண்ணத்தில்தான் மீனவர்கள் அப்படிச் செய்துள்ளனர். எனவே, அவர்களுக்கு உதவி
செய்வதுடன் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனத் தமிழக மற்றும்
கேரள அரசுகளுக்கு கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக