



அதேபோல இலங்கையும், ஹம்பந்தொட்டா துறைமுகம் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமே குத்தகைக்கு விடப்படுகிறது. அங்கு போர் கப்பல்கள் நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிவந்தது. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த ராஜபக்ஷேவின் குடும்பம், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துவந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே முன்வைத்த தேர்தல் அறிக்கையில் ஹம்பந்தொட்டா துறைமுகப் பிரச்னையும் ஒன்றாக இருந்தது. 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஹம்பந்தொட்டா துறைமுக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என அறிவித்திருந்தார்.
தேர்தலில் கோத்தபய வெற்றிபெற்றதும், அவர் தலைமையிலான அரசு, ஹம்பந்தொட்டா துறைமுக ஒப்பந்தத்தை ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட், நேற்று செய்தியாளர்களைச் சந்திக்கும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுபற்றிப் பேசியுள்ள இலங்கை அதிபர் கோத்தபய, “சீனா, இலங்கையின் நட்பு நாடாக இருந்தாலும், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த சீனாவின் உதவி தேவைப்பட்டாலும், அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய நான் பயப்படவில்லை. அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஹம்பந்தொட்டா ஒப்பந்தத்தால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஓரிரு வருடங்கள் என்றால் பரவாயில்லை, 99 ஆண்டுகள் என்றால் சற்று சிந்திக்கவேண்டியுள்ளது. எனவே, வேறு விஷயத்தில் சீனா முதலீடு செய்யலாம்” என்று கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக