சனி, 30 நவம்பர், 2019

கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்!

கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்!மின்னம்பலம் : கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யமாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளில், கடந்த 10 நாட்களில் மட்டும் நான்கு பேர், பல்வேறு காரணங்களால் மரணமடைந்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, நோயாளிகளை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானதுஇதனை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் எத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ளன?, அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, தமிழக மருத்துவ கல்வி இயக்குனருக்கும், மனநல காப்பக இயக்குனருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நோய் தாக்காமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அடிப்படை மருத்துவ வசதிகள் உள்ளனவா? இல்லை என்றால், மருத்துவ வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயசந்திரன் உத்தரவிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: