ஞாயிறு, 21 அக்டோபர், 2012

வாஜ்பாய், அத்வானி உறவினர்கள் மீது நாங்க நடவடிக்கை எடுக்கலையே.. திக்விஜய்சிங்

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரது உறவினர்களின் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருந்தும் காங்கிரஸ் அரசாங்கம் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.  இப்ப நல்லாவே புரிகிறது கனிமொழி மீது வன்மத்துடன் பாய்ந்து கடித்து குதறியது எந்த நோக்கத்தில் என்பதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் இந்த விஷயத்தில் நீங்கள் எல்லாம் அசல் ஆரியர்கள்  அய்யா
இது தொடர்பாக அவர் கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரது உறவினர்களின் முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருந்தபோதும் காங்கிரஸ் கட்சி அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அவர்களை சங்கடப்படுத்தக் கூடாது என்பதுதான்.
ராபர்ட் வத்ராவின் சொத்து மதிப்பு எப்படி கூடியிருக்கிறது என்று சார்ட்டட் அக்கவுண்டுதான் கேள்வி கேட்க முடியும். தமது மருமகனின் சொத்து மதிப்பு எப்படியெல்லாம் உயர்ந்தது என்று ஆராய்வது மாமியார் சோனியாவின் வேலை இல்லை. அரசியல்வாதிகளாகிய நாங்கள் கடவுள் அல்ல.. மனிதர்கள்தான் என்றார் அவ

கருத்துகள் இல்லை: