செவ்வாய், 23 அக்டோபர், 2012

சந்திரபாபு நாயுடு: தனித் தெலங்கானா மாநிலம் அமைவதை எதிர்க்கவில்லை

 தனித் தெலங்கானா மாநிலம் அமைவதை எதிர்க்கவில்லை என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தெலங்கானா பகுதியான ராஜௌலியில் 22.10.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு விரைவில் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி இப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்குவோம் என்று அவர் மேலும் கூறினார்.
"நான் உங்களுக்காக வருகிறேன்' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, தெலங்கானா பகுதியான மெகபூப்நகர் மாவட்டத்துக்கு சென்றார்.
அவரது வருகைக்கு தெலங்கானா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: