செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இலங்கை அகதிகளுக்கு ஓய்வூதியம் - ஜெயலலிதா

இலங்கை அகதிகளுக்கு ஓய்வூதியம் - ஜெயலலிதா
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீடிக்கப்படும் என தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.

இதனை செயல்படுத்தும் வகையில் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கை தமிழர்கள் மாதந்தோறும் இந்தியன் ரூபா 1,000 ஓய்வூதியமாக பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழர்களின் நலனில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தவில்லை. இதனால் அங்குள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: