சனி, 6 ஆகஸ்ட், 2011

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி



ஜேர்மனி தேசத்தில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி செல்வி ஷறீகா சிவநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் வேல்பெனின் மாநிலத்தில் செல்ம் நகரத்தில் தனது பெற்றோருடன் வசிக்கும் மேற்படிச் செல்வி ஷறீகா அண்மையில் ஜேர்மன் மாணவர்களுக்கு இடையில் ஜேர்மனிய பிரதமரால் நடாத்தப்பட்ட வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றில் முதல்பரிசைப் பெற்று சிறந்த திறமையுள்ள மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரைப் பாராட்டும் முகமாக 04.08.11 அன்று செல்ம் (Selm) நகர மேயர் மாறியோ லோ தமது நகரத்தின் அதி திறமையுள்ள (talent) மாணவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து பாராட்டுக் கேடயமும் வழங்கி கௌரவித்தார்.
இதற்கு முன்னர் கடந்த 18 யூலை மாதம் நோத்ரைன் வெஸ்பாலின் மாநிலத்தின் இளையோர் கலை கலாச்சார பாராளுமன்ற உறுப்பினர் ஊற்றே சேபர் அவர்கள் ( Ute Schäfter) ஷறீகா சிவநாதனுக்கு இப்பரிசை பொன் நகரத்தில் வழங்கியிருந்தார்.
இம் மாணவி ஜோ்மனியில் உள்ள செல்ம் நகரத்தில் பெற்றோருடன் வாழ்கின்றார்.
இங்கே காணப்படும் படத்தில் செல்வி ஷறீகா சிவநாதன் ஜேர்மனியின் செல்ம் நகரத்து மேயருடன் காணப்படுகின்றார்.

கருத்துகள் இல்லை: