வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சென்னையில் சிங்கள யாத்திரீகர்களை தாக்கிய குண்டர்கள்

சென்னையில் சிங்கள யாத்திரீகர்களுக்கு நடந்த காட்டு மிராண்டி தாக்குதல்களை நாகரிக மாந்தர்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். இது போன்ற நிகழ்சிகள் மிகவும் அருவருப்பானவை. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ் நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியும் இதுவரை இந்த வெட்ககேடான விடயத்தை பற்றி கண்டிக்கவில்லை.
இதில் சீமான் கட்சியை சேர்ந்த குண்டர்கள் மூவரை கைது செய்திருக்கிறார்கள்.தாக்குதல் நடத்தியவர்கள் சுமார் ஐம்பது பேர் ஆனால் மூன்று குண்டர்களை மட்டுமே போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
சீமான் போன்ற ரவுடிகளை அரசியல் தலைவர்களாக வளர விடும் தமிழார்வலர்கள் படித்த பாடங்களையே மீண்டும் மீண்டும் படிக்க போகிறார்கள்.

தமிழ் பண்பாடு இந்திய நாகரீகம் என்று வெற்று சொற்களால் ஓயாமல் பஜனை பாடும் வேஷதாரிகளே எங்கே போயிற்று உங்கள் அடிப்படை மனித நாகரிகம்?
சென்னை: சிங்கள யாத்திரீகர்களை சிலர் அடித்து உதைத்தனர். இதுதொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எலிபித்தியா என்ற பகுதியைச் சேர்ந்த 83 சிங்கள யாத்திரிகர்கள்  பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூலை 17ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தனர். ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை திரும்புவதாக இருந்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து வேப்பேரியில் தங்கி்யிருந்தனர்.

அப்போது இவர்களை பார்த்த சிலர் சரமாரியாக தாக்கினர். இந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 பேர் திரண்டு வந்து அவர்கள்  தங்கியிருந்த விடுதிக்குள்ளும் புகுந்து சரமாரியாக தாக்கினர். இதில் சில சிங்கள யாத்திரீகர்கள்  காயமடைந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேரைப் பிடித்தனர். பின்னர் அவர்கள் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து சிங்களர்கள் பெரும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்களை வேறு ஒரு ஹோட்டலுக்கு இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் இடமாற்றினர். அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை: