சனி, 6 ஆகஸ்ட், 2011

கீரிமலைக் கடலில் கற்பாறைகள் விழுந்து எழுந்து காலில், கையில், தலையில் எனக் காயப்பட்டு கெந்தி, நொந்து

கீரிமலைக் கடலில் நீராடுவதற்காக இறங்கி அங்கு பல்கிப்பெருகிக் கிடக்கும் பாறைக் கல்லுகளுடன் நடத்தும் போராட்டம் போதுமென்றாகி விடுகின்றது.

இந்த வருடத்தோடு கீரிமலைக்கடலில் தீர்த்தமாடுவதை தவிர்த்துவிட வேண்டும் என்ற முடிவை எடுக்குமளவிற்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆடி அமாவாசை தினத்தில் கீரிமலைக் கடலில் தீர்த்தமாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த உண்மை.

அதேபோல் கீரிமலைக் கடலில் கற்பாறைகள் தீர்த்தமாடக்கூடிய இடம் முழுவதிலும் பரந்திருப்பதும் தெரிந்த விடயம். அப்படியானால் கீரிமலைக் கடலில் தீர்த்தமாடுவதற்கு வசதியாக ஒரு பகுதிக்கேனும் கல்லுகளை அகற்றி பிதிர்க்கடன் தீர்ப்பவர்களுக்கு உதவி செய்யலாம் அல்லவா? எதுவுமே நடக்கவில்லை. தீர்த்தமாடியவர்கள் கடலில் விழுந்து எழுந்து காலில், கையில், தலையில் எனக் காயப்பட்டு கெந்தி, நொந்து நடப்பதைத்தான் காணமுடிகின்றது.

கருத்துகள் இல்லை: