வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மாப்பிள்ளை விவகாரம் : அம்மா - மகள் மோதல்...?!!

அம்மா -மகள் என்று இல்லாமல் தோழிகளை போல் ஒன்றாக சுற்றி வந்தவர்கள் த்ரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும். பார்டியாகட்டும், பொது நிகழ்ச்சிகள் ஆகட்டும் இருவரும் ஒன்றாகத்தான் தெரிவார்கள். இப்படி இணக்கமாக இருந்த இருவருக்கும், இப்போதும் கடும் மோதல் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தமோதலுக்கு காரணம் த்ரிஷா பற்றிய திருமணம் செய்திதானாம்.

இருதினங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அல்லது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்ய இருப்பதாகவும், செப்டம்பரில் இவர்களது நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் த்ரிஷாவின் தாயார் உமா ‌கூறியிருந்தார். ஆனால் இந்த செய்தி வெளியான அன்றிரவே தனது டிவிட்டர் வலைதளத்தில் இதனை மறுத்துள்ளார் த்ரிஷா. இதற்கு காரணம் மாப்பிள்ளை யார் என்பதில், த்ரிஷாவுக்கும், உமாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் தான்.

காதல் திருமணம்தான் செய்வேன் என்று அடிக்கடி கூறிவரும் த்ரிஷா, இப்போது தனது மனதுக்கு பிடித்தமான ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளாராம். ஆனால் உமாவோ, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அதனால் தான் த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்றும் உமா பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்திருக்கிறார். இதில் கடுப்பான த்ரிஷா, மீண்டும் தன் திருமண செய்திக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

த்ரிஷா திருமணத்தால் அம்மா-மகளுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டு இருக்கிறது
ரஜனிகாந்த் நலம் பெற 1008 ரசிகர்கள் பழனியில் மொட்டை போட்டுக்கொண்ட மாதிரி திரிஷாவின் நல்வாழ்வுக்காகவும் 10008 பேராவது மொட்டை போடுங்களேன் நாவிதர்கலாவது பிழைத்து போகட்டும்.

கருத்துகள் இல்லை: