புதன், 8 டிசம்பர், 2010

ஆகாஷுடன் வனிதா மோதல்.குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி முதல் கணவர்

Vanita, Anandaraj and Akashசென்னை: தனது முதல் குழந்தைக்கு சொந்தம் கொண்டாடி, நடிகை வனிதா தன் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நடிகை வனிதா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரருடன் போட்டுவந்த குடும்ப சண்டை நேற்று திசைமாறியுள்ளது.

தனது மூத்த குழந்தை யாருக்குச் சொந்தம் என்பதில் வனிதாவுக்கும் முன்னாள் கணவர் ஆகாஷுக்கும் மீண்டும் தகராறு மூண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று வனிதாவும், ஆகாஷும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை தனித்தனியாக சந்தித்து மூத்த குழந்தையை சொந்தம் கொண்டாடி முறையிட்டனர்.

நடிகை வனிதா, அவரது பெற்றோர்களான நடிகர் விஜயகுமார், மஞ்சுளா ஆகியோருடன் கடும் மோதலில் ஈடுபட்டார். சகோதரர் அருண் விஜய் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் ஆளாளுக்குப் பிரஸ் மீட் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த குடும்ப சண்டை நேற்று திடீரென்று வேறு ரூட்டில் போய்விட்டது. நேற்று காலை 11 மணியளவில் வனிதா, தனது 2-வது கணவர் ஆனந்தராஜுடன் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை 2-வது முறையாக சந்தித்தார்.

பின்னர் நிருபர்களைச் சந்தித்த வனிதா, "அருண் விஜய் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நடந்த சம்பவங்களை நான் வாக்குமூலமாக கொடுத்துள்ளேன். அருண் விஜய்யை எப்படியாவது கைது செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் நான் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளேன். அவரும், அருண் விஜய் மீது நடவடிக்கை [^] எடுப்பதாக கூறியுள்ளார்.

எனது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரியை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க எனது தந்தை விஜயகுமார் சதித்திட்டம் தீட்டுகிறார். இதற்கு எனது முதல் கணவர் ஆகாஷும் துணை போகிறார். எனது மகனை நான் விட்டுக்கொடுக்க முடியாது. அவன் எனக்கு வேண்டும். இந்த விஷயங்களையும் போலீஸ் கமிஷனரிடம் நான் எடுத்துக்கூறி உள்ளேன்..." , என்றார்.

நடிகர் ஆகாஷ் புகார்:

இந்த நிலையில், வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ் நேற்று மாலை 3 மணியளவில் மகன் விஜய் ஸ்ரீஹரியோடு வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். கமிஷனரிடம் மனு ஒன்றையும் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "வனிதாவை கடந்த 2000-ம் ஆண்டு நான் திருமணம் செய்துகொண்டேன். எங்கள் திருமண உறவின்மூலம் விஜய் ஸ்ரீஹரி (வயது 9) என்ற மகனும், ஜோவிகா (5) என்ற மகளும் பிறந்தனர். அதன்பிறகு எனக்கும், வனிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 9.6.2007 அன்று குடும்பநல நீதிமன்றம் [^] மூலம் விவாகரத்து பெற்றோம்.

நீதிமன்ற உத்தரவில், மகன் விஜய் ஸ்ரீஹரி என்னுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பராமரிப்பில் இருப்பதற்கும், மகள் ஜோவிகா வனிதாவின் பாதுகாப்பில் இருப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், நான் விரும்பினால் வனிதாவின் அனுமதியோடு எனது மகளை பார்த்துக்கொள்ளலாம். வனிதா விரும்பினால் எனது அனுமதியோடு மகனை பார்த்துக்கொள்ளலாம். இதற்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இடையில் 2008-ம் ஆண்டு மகன் விஜய் ஸ்ரீஹரியை நியூசிலாந்து நாட்டில் படிக்க வைக்கிறேன் என்று வனிதா அழைத்து சென்றார். நானும் அனுப்பி வைத்தேன்.

2 ஆண்டுகள் நியூசிலாந்தில் எனது மகன் படித்தான். இந்த சூழ்நிலையில், வனிதா ஹைதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனிதா தனது 2-வது கணவரோடு சென்னை வந்தார். அதன்பிறகு எனது மகன் வனிதாவோடு இருக்க சம்மதிக்கவில்லை. என்னுடன் வந்துவிட்டான்.

அவனை சென்னை எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நான் படிக்க வைத்துள்ளேன். சமீபத்தில் விஜயகுமார் பேரன் ஸ்ரீஹரியை பார்க்க விரும்புவதாக சொல்லி வனிதா அழைத்து சென்றார். அதன்பிறகு 7-ந் தேதி அன்று எனது மகன் மீது உரிமைகோரி வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளதாக அறிந்தேன். இதனால் எனது மகனை, என்னுடன் அழைத்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவன் என்னோடுதான் இருக்கிறான்.

பிள்ளைக்காக திருமணம் செய்துகொள்ளவில்லை...

சமீபத்தில்கூட நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் வனிதா வலுக்கட்டாயமாக மகனை அழைத்து சென்றிருக்கிறார். அவனை தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டு டி.வி.யிலும் பேட்டி கொடுத்துள்ளார். இதை எனது மகன் விரும்பவில்லை.

வனிதா 2-வது திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். ஆனால் நான், எனது பிள்ளைகளுக்காக 2-வது திருமணம் செய்துகொள்ளவில்லை. எனது பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்க வேண்டியது எனது கடமையாகும். விஜயகுமாரும், வனிதாவும் தந்தை-மகள் என்ற முறையில் எப்படியோ சண்டை போட்டுவிட்டுப் போகட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை.

எனது மகன் விஷயத்தில் தேவையில்லாமல் அவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்றும், எனது மகனின் உயிருக்கு இந்த சண்டையினால் ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும், அவனுக்கு உரிய பாதுகாப்பு [^]வேண்டும் என்றும் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

வனிதா மீதோ, அவரது 2-வது கணவர் மீதோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுக்கவில்லை. எனது மகனின் பாதுகாப்பு கருதிதான் மனு கொடுத்துள்ளேன்...", என்றார்.

நீதிமன்றம் தனக்கு அளித்துள்ள அனுமதியையும் காட்டினார் ஆகாஷ்.

இந்தப் பேட்டியின் போது மகன் விஜய்ஸ்ரீஹரியும் உடன் இருந்தான்.

கருத்துகள் இல்லை: