திங்கள், 6 டிசம்பர், 2010

ஆப் டவுசர் ஆர்யா - கலாய்த்த ரசிகர்கள்

           ஜீவா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் சிங்கம் புலி. இதன் இசை வெளியீட்டு விழா 03-12-2010 அன்று நடந்தது. நேரம் கடந்து கொண்டே இருக்க படத்தின் நாயகனஜீவாவை ஆவலோடு எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் தன் நண்பர்களான ஆர்யா, ஜெயம் ரவியுடன் வந்து நின்றார் ஜீவா. இதில் அனைவருக்கும் ஆச்சரியம் ஆர்யா ஷாட்ஸ் அணிந்து கொண்டு வந்ததுதான்!ஆர்யா மேடைக்கு வரும் போது ஆப் டவுசர் ஆர்யா என ரசிகர்கள் கூச்சல் போட்டனர். ஆர்யாவும் சிரித்துக் கொண்டே ரசிகர்களுக்கு கையசைத்தார். ஜெயம் <ரவி, ஆர்யா, ஜீவா என மேடையில் மூவரும் ஒருவருக் கொருவர் பேசி சிரித்தபடி அமர்ந்திருந்தனர். ஆர்யா பேச வந்தார்... நான் ஜெயம் ரவி, ஜீவா மூவரும் துபாய்க்கு கிரிக்கெட் மேட்ச் விளையாட சென்று இருந்தோம். காலை தான் சென்னை திரும்பினோம்... ஏர்போட்டில் இருந்து நேராக இங்கே தான் வருகிறோம்.என்னை அழைத்த போது நான் ஷாட்ஸ் போட்டிருக்கேன் நான் வரமுடியாது என்றேன். ஆனால், ஜீவா பரவாயில்லை நீ என் நண்பேண்டா! அப்படியே வா என்று என்னை வரச் சொன்னார். அதனால் தான் நண்பனுக்காக ஆப் பேண்ட் போட்டு இங்கே வந்தேன். இப்போ உங்கள் கேள்விக்கு விடை கிடைச்சிருச்சா.. என்று ரசிகர்களிடம் சொல்ல... நண்பேண்டா! என ரசிகர்கள் கூச்சல் போட்டனர்.அடுத்து ஜெயம் ரவி பேசும் போது... சினிமாவில் எத்தனையோ நண்பர்கள் சென்டிமென்டை பார்த்திருப்போம், ஆனால் நண்பனின் இசை வெளியீட்டுவிழாவிற்கு ஷாட்ஸோடு வந்த நண்பன் எங்காவது உண்டா என சொல்லிவிட்டு ஆர்யா தான் உண்மையான நண்பேண்டா! <என சொன்னார். இது ஜீவா படத்தின் இசை வெளியீடு. நீங்கள் எல்லோரும் ஜீவாவின் ரசிகர்கள்... ஆனால் நீங்கள் ஜீவா ரசிகர்கள் மட்டுமாக இருக்கமுடியாதே! ஏன்னா நானும் ஆர்யாவும் ஜீவாவின் நண்பர்கள். அதனால் நீங்கள் எங்கள் மூவரின் ரசிகர்களாகத் தான் இருக்க முடியும் என்றார் ஜெயம் ரவி.
ஜீவா எனக்கு ஒரு முன்னோடி. ஆமாம், நான் ஜனநாதன் சாரோட 'பேராண்மை' படம் நடிச்சேன், அவரிடம் ஜீவா ஏற்கெனவே '>ஈ' படம் பண்ணியிருந்தார். அப்போ ஜீவாவிடம்..'அவர் சொல்வது ஒன்னுமே எனக்கு புரியலை, நீ எப்படிடா நடிச்சே' என்று நான் கேட்க அவர் சொல்றத மட்டும் செய், படம் பார்க்கும் போது உனக்கு புரியும் மச்சின்னு சொன்னான். இப்போ அமீர் சாருடன் ஆதிபகவன் படம் நடிக்கிறேன். அதற்கும்ஜீவாதான் முன்னோடி, அமீர் சார்ன்னா அப்படித்தான் இருப்பார், உனக்கு என்ன... நடிக்கிற வேலையை மட்டும் பார் என என்னிடம் ஜீவா சொன்னான் எனஜீவா புகழ் பாடினார் ஜெயம் ரவி.ஜெயம் ரவி ’ஆளவந்தான்’ படத்தில் உதவி இயக்குனர் என்பதால், அவர் விரைவில் படம் இயக்க போவதாகவும், அப்படிஇயக்கினால் அதில் ஜீவா தான் நாயகன் என்றும் முன்பே சொல்லியிருக்கிறார்.சமீபமாக தமிழ் சினிமாவை கேவலமாக பேசிய ஆர்யா இதுவரை மௌனமாக இருந்தார். ஆனால் அவரின் சிக்கு புக்கு படம் வெளியாகி இருப்பதால்எனக்கு வாழ்வு கொடுத்ததே தமிழ் மக்கள் தான், அவர்களை நான் தவறாக பேசமாட்டேன். அப்படி நான் பேசியதில் தவறு இருந்தால் அதற்காக வருத்தம்&தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் இப்பொழுது தான் வாயைத் திறந்திருக்கிறார். அதுமட்டும் இல்லாது தன் சிக்கு புக்கு படத்துக்கும் ஆதரவு தர ரசிகர்களைகேட்டிருக்கிறார் ஆர்யா. தன் படம் வெளியாகி இருப்பதால் தான் இவ்வளவு ப

கருத்துகள் இல்லை: