புதன், 8 டிசம்பர், 2010

ஆந்திர காங். எம்எல்ஏக்களுக்கு ரோஜா சவால்

ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற காங்.எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிட தயாரா என, நடிகை ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, ராஜசேகர ரெட்டி சுய மரியாதை மிகுந்தவர். இதேபோல் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும், சுயமரியாதை மிக்கவர். யாருக்குப் பணிந்து செல்ல மாட்டார். காங்கிரஸ் மேலிடம் கீழ்மட்ட தலைவர்களை அடிமைபோல் நடத்துகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவிய ஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து ஆந்திராவை சீர் குலைத்தது தான் காங்கிரசின் சாதனை.

கடந்த தேர்தலில் ராஜசேகர ரெட்டியால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா?

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பெயரைச் சொல்லி ஆந்திர பொதுமக்களிடம் ஓட்டு கேட்க தைரியம் உள்ளதா? தற்போது மாநில, மாவட்ட, வட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு விலகி ஜெகன்மோகன் ரெட்டி பக்கம் வந்து விட்டார்கள்.

தேர்தலின் போது காங்கிரசுக்கு வாக்குசாவடி ஏஜெண்ட் நியமிக்க கூட ஆள் இல்லை என்பது தான் உண்மை. அடுத்த தேர்தலில் பீகாரில் ஏற்பட்ட நிலை தான் ஆந்திராவிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: