திங்கள், 6 டிசம்பர், 2010

எஞ்சிய வன்னி மக்களைக் கேட்டால் புலிப்பயங்கரவாதத்தைப் பற்றி விலாவாரியாகச்

இது சலசலப்பு உசாந்தினி பற்றிய செய்தி வெளியிட்டபின் தமிழ்வின் வெளியிட்ட செய்தி
சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டு மேற்குறிப்பிட்ட காணொளியில் தோன்றும் பரிதாபகரமான பெண்புலி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவரது இயற்பெயர் உசாந்தினி இ இயக்கப்பெயர் மதுநிலாஇ மது என எல்லோராலும் அழைக்கப்படுபவர். வயது 19. யுத்தகாலப்பகுதியில் மன்னார் ஆலம்குடா பகுதியில் இராணுவத்திடம் பிடிபட்டவரே இப்பெண் போராளி. இவருடைய தகடு இல 1023இ இவர் யாழ் பண்டைத்தரிப்பை சேர்ந்தவர் ஆவார்.
இவர் கடந்தவருட யுத்தகாலப்பகுதியில் அதாவது 2009 ஜனவரி மாத இறுதியில் எதிரியிடம் சிக்குண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது
எப்பிடி இருக்கு பாட்டி சுட்ட பணியாரம்?
புலிப்பயங்கரவாதிகளால் பலாத்காரகமாக பிடிக்கப்பட்டு இராணுவப் பயிற்சியளிக்கப்பட்டு இலங்கை இராணுவத்திடம் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக சரணடைந்தவர் பண்டத்தரிப்பைச் சேர்ந்த உசாந்தினி. இவரை யாரென்று தெரியாமலே அவரது படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு இவரை யாரென்று தெரியுமா என்று குழம்பிய புலிகளின் பினாமிகளான காகிதப் பயங்கரவாதிகளான லங்காஸ்ரீயின் அங்கமான தமிழ்வின் கேள்வி எழுப்பியிருந்தது. புலிகளால் முக்கியமாக பயங்கரவாதி பிரபாகரனின் பயங்கரவாத வாரிசான சாள்ஸ் அன்ரனியால் கொல்லப்பட்ட தமிழர்களின் படங்களை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மக்களென்று காண்பித்து பயங்கரவாதி பிரபாகரனை காப்பாற்ற புலன் பெயர்ந்தவர்களை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்த புனையதளங்களில் லங்காஸ்ரீ முதன்மையானது. இராணுவத்தினரிடம் சரணடைந்த புலி உறுப்பினர்களையே யாரென்று தெரியாத இவர்கள் செய்திகளை புலன் பெயர்ந்த மந்தைக்கூட்டம் இலகுவில் நம்பிவிடுகிறது. இராணுவத்தினரிடம் சரணடைந்த உசாந்தினியின் நிலைமைக்கு காரணம் பயங்கரவாதி பிரபாகரனே! எஞ்சிய வன்னி மக்களைக் கேட்டால் புலிப்பயங்கரவாதத்தைப் பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள். புலன் பெயர்ந்தவர்களின் பணத்தை உறிஞ்சி பிழைப்பு நடத்து லங்காஸ்ரீ காகிதப்புலிகள் உசாந்தினி சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் வீடியோ பாரொளியின் தகவல்களையும் படங்களையும் சலசலப்பு இணையதளம் வெளியிட்ட பின் அந்த யுவதி யார் என்பதை தாங்கள் இனம் கண்டு கொண்டார்களாம் என்று தனது செய்தியில் தெரிவித்துள்ளது. சலசலப்பிற்கு நன்றி தெரிவிக்க வேண்டிய கடமை தமிழ்வின்னிற்கு உரிய தார்மீக கடமை. மிக விரைவில் பயங்கரவாதி பிரபாகரனின் வாரிசான பயங்கரவாதி சாள்ஸ் அனரனி படுகொலை செய்த தமிழர்களின் விபரங்களை சலசலப்பு வெளியிடும். இராணுவத்தினரிடம் சரணடைந்த முக்கிய புலி உறுப்பினர்களின் திகிலூட்டும் தகவல்களையும் சலசலப்பு வெளியிடும். தமிழ்வின்னில் வெளிவந்த உண்மைக்கு புறம்பான செய்திகள் அம்பலமாக்கப்படும்.
உசாந்தினி போராளி அல்ல, அவர் ஒரு புலிகளின் பணயக் கைதி. வன்னியிலிருந்து அவரால் தப்பிச் செல்ல அவரால் முடியவில்லை. இராணுவத்திடம் சரணடைவதுதான் அவருக்கு ஒரேயொரு வழி. இவர் போன்று இராணுவத்திடம்சரணந்தவர்கள் பலர். காரணம் பிரபாகரனிடம் இருப்பதை விட இராணுவத்திடம் சரணடைவது எவ்வளவோ மேல்

கருத்துகள் இல்லை: