புதன், 4 ஆகஸ்ட், 2010

யாழ். - பூநகரி சௌகரியமான பயணிகள் படகுச் சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

யாழ். - பூநகரி படகுப்பயணிகளின் வேண்டுகோளை ஏற்று குறைபாடுகள் அகற்றப்பட்டு வசதிகளுடன் கூடிய பயணிகள் படகுச் சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் ஆரம்பித்து வைத்தார்.

ஏற்கனவே பயணிகள் படகுச் சேவையானது இடம்பெற்று வந்த நிலையில் அதில் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். குறிப்பாக சரியான வடிவமைப்பு இன்மையால் வெயில் மழை போன்ற இயற்கைக் காரணிகளின் பாதிப்பிற்குள்ளானதுடன் கடும்காற்று வீசும் நேரம் கடல்நீர் தெறிப்பும் படகினுள்ளே இடம்பெற்றிருந்தது. இவ்விடயமானது பயணம் செய்யும் பொதுமக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்திய அமைச்சரவர்கள் விடுத்த உரிய பணிப்புரைகளை அடுத்து குறைபாடுகள் அகற்றப்பட்ட வசதியான இருக்கைகளுடன் கூடிய சௌகரியமான படகுச் சேவை இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: