சனி, 7 ஆகஸ்ட், 2010

தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும்

மதுரை: திமுகவுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக அழைத்தால் பேசுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து, தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் டாஸ்மார்க் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்க வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

பாமக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2011ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாமக 20 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் மாற்றமில்லை.

திமுகவில் இணைவது குறித்து அக்கட்சியினர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த, பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசி முடிவு செய்வோம்.

காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைந்தால் அதில்இடம் பெறுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்தபோது, ராஜ்யசபா சீட் தருகிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை. பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக போட்டியிட ஒத்துழைக்குமாறு கேட்டோம். இதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இத்தகைய காரணங்களால் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார் ராமதாஸ்.
பதிவு செய்தவர்: பட்டினத்தார்
பதிவு செய்தது: 07 Aug 2010 7:04 pm
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள் கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர


பதிவு செய்தவர்: கேண கவுண்டன்
பதிவு செய்தது: 07 Aug 2010 6:58 pm
எங்க ஐயா இப்படித்தான்.. உளருவாறு... பகல்ல டாஸ்மாக்க மூட சொல்லுவாரு... ராத்திரில பாண்டிச்சேரி போய் ரூம் போட்டு குடிப்பாரு (நீங்க வேணும்னா அவரு கண்ணை கிட்டக்க பாருங்க...குடிச்சி குடிச்சி செவந்திருக்கும்.)

கருத்துகள் இல்லை: