சனி, 25 ஆகஸ்ட், 2012

செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட் களை காண முடிகிறது. அவை என்ன?

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பொருள் குறித்து ஆய்வு
 செவ்வாய் கிரகத்தில் காணப் படும் மர்மமான பொருள் குறித்து, விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா' சார்பில் கியூரியாசிட்டி ரோவர்' விண்கலம் அனுப்பப்பட்டது.
கடந்த 6ஆம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, கியூரியாசிட்டி' முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரான பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, கியூரியாசிட்டி' படம் பிடித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், டெட் பிக்சல்'கள் என, விஞ்ஞானி கள் விளக்கம் தருகின்றனர். வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, அலீன் டிஸ்க்ளோசர்' அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர், செவ்வாயின் அடிவானத்தில் அடை யாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறுகையில், கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோ வில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட் களை காண முடிகிறது. அவை என்ன? அடை யாளம் தெரியாத பறக்கும் பொருட்களா, துகள் களா? எனத் தெரியவில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை: