திங்கள், 20 ஆகஸ்ட், 2012

பஸ் டிரைவர்களுக்கு குவாட்டர் சப்ளை. உணவுக்காக நிறுத்தப்படும், சாலையோர

நெடுந்தூரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், உணவுக்காக நிறுத்தப்படும், சாலையோர, “மோட்டல்களில், டிரைவர், நடத்துனர்களுக்கு, குவாட்டர் வழங்குவதாக, பகீர் தகவல் வெளியாகி உள்ளது. போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள், தொலைதூர பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, நகர, கிராமப் பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை - சென்னை, சேலம் - பெங்களூரு, மதுரை - கோவை, கோவை - திருப்பதி என, பல வழித்தடங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலையிலும், பயணிகளின் உணவு மற்றும் கழிவறை வசதிக்காக, மோட்டல்கள் செயல்படுகின்றன. இங்கு, பஸ் டிரைவர், நடத்துனருக்கு இலவசமாக உணவு வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான சிகரெட், ஹான்ஸ், வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன.


அரசு போக்குவரத்து கழகம், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட, பஸ் டிரைவர், நடத்துனர்களிடம், குறிப்பட்ட மோட்டல்களில் மட்டுமே, நிறுத்த வேண்டும், மற்ற இடங்களில், நிறுத்தக்கூடாது என்ற கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அரசு பஸ் டிரைவர்களில் பலர், அதை கடைபடிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு, அந்த கட்டுப்பாடு இல்லை.

“டிரைவர்கள் தங்களுக்கு விருப்பமான, பாதுகாப்பு இல்லாத இடங்களில், பஸ்சை நிறுத்துகின்றனர். அவர்கள் பஸ் நிறுத்தும் இடத்தில், தரமற்ற உணவு கிடைக்கிறது. பெண்கள் கழிவறைக்கு செல்வதற்கான வசதியில்லை என, பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, சில, மோட்டல் உரிமையாளர்கள், பஸ் தங்களுடைய இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காக, மது சப்ளை செய்வதாக கூறப்படுகிறது. மதுவைப் பெறும் டிரைவர்களில் சிலர், அங்கேயே பாதியை அருந்திவிட்டு, பஸ்சை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

தனியார் பஸ்களை இயக்கும் நிறுவனங்கள், எந்த, மோட்டலில் பஸ்களை நிறுத்த வேண்டும் என்று எவ்வித கட்டுப்பாடுகளும் விதிப்பது இல்லை. தனியார் பஸ்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அதில் பயணிக்கும் பயணிகளை கவர, டிரைவர்களுக்கு, மோட்டல் உரிமையாளர்கள், சரக்கு வழங்குகின்றனர்.அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களை, பயணத்தின் போது, போக்குவரத்துத் துறையினர், திடீர் சோதனை மேற்கொண்டால், உண்மை தெரியவரும்.

- நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை: