சனி, 6 நவம்பர், 2010

தாய்லாந்தில் தொடரும் இலங்கை அகதிகள் கைது : கனடா குடிவரவு சட்டத்தை தீவிரப்படுத்துகிறது

தாய்லாந்தில் வைத்து அண்மையில் 61 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, கனடா தமது புதிய குடிவரவு சட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் கனடா அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட 3 கட்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரையில் 200 பேருக்கும் அதிகமான இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் போன்று மேலும் பலர் கனடா நோக்கி வருவதற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் தாய்லாந்து அரசாங்கம், அவர்களை கைது செய்வதற்கு முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் தாய்லாந்தில் இருந்து விரைவாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இலங்கையர்கள் முயல்வதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அவர்களை தடுப்பதற்காக, கனடாவின் குடிவரவுச் சட்டத்தை துரிதமாக இறுக்கப்படுத்தும் முயற்சிகள் அவசியப்படுவதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: