சனி, 6 நவம்பர், 2010

எதுவும் சாப்பிடாமல் உயிர்வாழும் அதிசய சிறுவன்

லண்டன்: இங்கிலாந்தில் எந்த உணவும் சாப்பிடாமல் நான்கு ஆண்டுகளாக சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருகிறான். கடந்த நான்கு ஆண்டுகளாக திரவ உணவு மட்டுமே சாப்பிட்டு வருகிறான் டேனியல் ஹாரிசன் என்னும் சிறுவன். இந்த சிறுவனுக்கு ஆட்டிஸம் நோயால் பாதிக்கபட்டுள்ளான். அவனுக்கு எல்லாவித சிகிச் சைகளும் செய்த போதிலும் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதம் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்குதலுக்கும் உள்ளானான். அதுமட்டுமல்லாமல் நுரையீரல் நோய் தாக்குதலும் உள்ளது.மேலும் மற்ற சிறுவனைப்போல் இவனும் சாப்பிட வேண்டும் என்ற கனவு அவனுக்கு உள்ளது. அதே சமயம் அவனுக்கான உணவு குழாய் மூலம் தருவது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது என சிறுவனின் தந்தை கெவின் தெரிவித்தார். தற்போது டேனியலின் பெற்றோர் ஆஸ்திரியாவில் உள்ள யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரி மட்டுமே முழுமையாக நம்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: