சனி, 6 நவம்பர், 2010

ஜாதிவாரியாக வாக்காளர் புள்ளி விவரம் சேகரிப்பு: தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.,

திருச்சி: "தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக, தொகுதி வாரியாக ஜாதிரீதியிலான வாக்காளர் எவ்வளவு பேர் உள்ளனர்' என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை உளவுத்துறையினர் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் எதிர்வரும் 2011ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கவுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, கட்சியினரை உற்சாகமாக தேர்தல் பணிகளை செய்ய வைப்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளும்கட்சியான தி.மு.க.,வும் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள வசதியாக பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பது குறித்து உளவுத்துறை போலீஸார் ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக வாக்காளர் பற்றிய புள்ளி விவரங்களை அவர்கள் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க.,- வி.சி., ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் வைத்து, தே.மு.தி.க., மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளை தனி அணியாகவும் வைத்து, கடந்த எம்.பி., தேர்தலில் சட்டசபைத் தொகுதிவாரியாக அவர்கள் பெற்ற ஓட்டுகள், ஓட்டு சதவீதம் ஆகியவற்றையும், சட்டசபைத் தொகுதியின் மொத்த ஓட்டுக்கள் (மறுவரையறுக்கப்பட்ட தொகுதி வாரியாக) ஆகியவற்றையும் உளவுத்துறை போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர்.

"ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ஜாதிரீதியாக எவ்வளவு வாக்காளர் உள்ளனர்?' என்பதையும், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பார்களா, தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சாதக, பாதக சூழ்நிலை என்ன என்ற புள்ளி விவரங்களையும் உளவுத்துறை போலீஸார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இதன்மூலம் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி தயராகிவிட்டது தெரிகிறது.இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக அறிவிக்கப்பட்ட அரசு திட்டங்களில் எவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை? என்றும், அங்குள்ள தேவைப்படும் அவசர அடிப்படை தேவைகள் என்ன என்பது குறித்தும் விவரங்கள் உளவுத்துறை போலீஸ் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.உளவுத்துறை போலீஸாரால் சேகரிக்கப்பட்டு வரும் புள்ளி விவரங்கள் இன்னும் இரண்டொரு வாரங்களில் முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உளவுத்துறை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர பாண்டியன் - மதுரை,இந்தியா
2010-11-06 07:13:32 IST
பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!! இப்பிடியே எண்ணெய் ஊத்தி ஊத்தி தீயை வளர்த்து விடுங்கோ! ஜாதி அழியும்னு எனக்கு நம்பிக்கையில்லை. திரும்ப நம்ம பேர்ல ஜாதி பேரை சேர்க்க வேண்டியது ஒண்ணுதான் பாக்கி. கடந்த 30 வருடங்களாய் தமிழகம் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. நவீன டெக்னாலஜியின் உதவியோடு இன்னும் இருபது வருடங்களில் ஒரு 500 ஆண்டு பழமையை எட்டிவிடுவோம். ஜெய் ஹிந்த்!...
லொடுக்கு பாண்டி - coimbatore,இந்தியா
2010-11-06 06:27:16 IST
உளவு துறைக்கு வேறு வேலை இல்லையா ? இவர்களுக்கு வேலை, கட்சி வேலை பார்ப்பது தானா ? இதற்கு நீதி மன்றம் ஏன் கண்டனம் தெரிவிக்க மறுக்கிறது ? நீதி அரசர்கள் தங்கள் செஞ்சோற்று கடனை கழிக்கின்றனரா ? அது சரி, திமுக ஏன் இந்த கணக்கை எடுத்து சமயத்தை வீண் அடிக்கிறது ? அவர்களுடைய கொள்கையே வேறு, திறமையே வேறு !!! கொள்ளை அடித்த பணத்தை எடுத்து விட வேண்டியது தானே ? தில்லு முள்ளு எல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே !!!...
ravishankar - chennai,இந்தியா
2010-11-06 06:16:54 IST
இதை விட ஒரு தரம் கெட்ட செயல், தரணியிலே எங்கும் காண முடியாது. இதே கரையான், மன்னிக்கவும்,கலைஞர், தனது உடன் பிறப்புகளை சாதியற்ற பெயர்களை உபயோகத்தில் கொண்டுவர வேண்டும் என்று சொன்னார். தேர்தல் என்றதும், கேவலம் தனது சுய நலத்திற்காக, நாட்டை ஜாதி என்கிற கேவலத்தால், பிளவு படுத்தி, தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே, அவருடைய எண்ணம். இதை நமது உடன்பிறப்புகள் 'ராஜதந்திரம்' என்று கூறுவர். , வெட்கம்....
திரு ஜெய் - கனடா,கனடா
2010-11-06 04:47:47 IST
இதற்கு பெயர் தான் ஜாதி வெறி. ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்காளர்கள் உள்ள ஜாதியில் வேட்பாளரை தேர்தெடுத்து, சட்ட சபைக்கு அனுப்பினால், அவர்கள் தங்கள் ஜாதி மக்களுக்கு தான் கடமைப்பட்டவர்கள். இவர்களை சட்டமன்ற உறுப்பினர் என்று கூறுவதை விட ஜாதி மன்ற உறுப்பினர் என்று அழைக்கலாம். இதைவிட ஜாதி வாரியாக சட்டமன்ற ஒதுக்கீட்டை செய்யலாம்....
anas - riyadh,சவுதி அரேபியா
2010-11-06 01:45:31 IST
எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன் தப்பா நினைக்காதீங்க. யாரும் சாதி பாத்து ஒட்டு போடாதீங்க. இந்த தேர்தலில் சாதி கட்சிகளை ஒழித்து நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல அனைவரும் நல்லவர்களை தேர்ந்து எடுத்தால் தான் தமிழ் நாடு இன்னும் முன்னேறும். அனஸ். ரியாத்.23...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-11-06 01:23:41 IST
ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தினாலும் உங்களால் ஆணியே புடுங்க முடியாது. வாசகர்களே, எனக்கு மஞ்சள் துண்டை ஒரு விஷயத்தில் மிகவும் பிடிக்கும், அவர் உலகத்திலே மோசமான ஆட்சியை கொடுத்தாலும், தன் குடும்பத்திற்கு ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுக்கிறார், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தகப்பன். இது போன்ற தகப்பனாரை உலகத்தில் எங்குமே காண முடியாது. எங்க அப்பா ஐம்பது வயதிலும் என்னால் உடம்புக்கு முடியவில்லை என்று வேலைக்கு சரியாக செல்லுவதில்லை, இது போல் எத்தனையோ குடும்பத்தில் குடித்துவிட்டு, காசை வீணடித்து பிள்ளைகளை படிக்கவைக்காமல் கஷ்டபடுத்தும் தகப்பன்கள் இருக்கும் இந்த காலத்தில் 86 வயதிலும் சும்மா கில்லி மாதிரி பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் காற்றாக பறந்து டெல்லிக்கு சென்று வெற்றிகரமாக பதவிகளை பெற்று திரும்ப வருகிறார், இதே வயதில் நம்முடைய அப்பாக்கள் இது போல சக்கர நாற்காலியில் நமக்காக செல்லுவார்களா? எத்தனை பேருக்கு கிடைக்கும் இது போன்ற தகப்பன். சொல்லுங்க மனதை தொட்டு? குடும்பத்திற்காக இரண்டு லட்சம் கோடி ரூபாய் சேர்த்துள்ளார், ஆனால் நாம் அப்பாவோ இந்த வயதில் எனக்கு முடியவில்லை, ஐம்பது வயதிற்கே வயதாகிவிட்டது என்று கூறி ஒய்வு எடுக்கிறார்கள், ஆனால் குடும்பத்தின் நலனுக்காக ஓய்வுக்கே ஒய்வு கொடுத்து இடைவிடாது கொள்ளையடித்து தன் மக்களை இன்பத்தில் வைத்திருக்கும் ஒரு தகப்பன், அந்த குடும்பத்திற்கு குபேரன் கொடுத்த வரப்ரசாதம் மஞ்ச துண்டு. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி மற்றும் அவர் குடும்ப உறுபினர்கள் எல்லாரும் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறார்கள், இப்படி குடும்பத்திற்காக இந்த வயதிலும் உழைக்கும் பிள்ளைகளுக்கு ஒரு அப்பா, மனைவிக்கு நல்ல கணவன், பேரன் பேத்திகளுக்கு ஒரு நல்ல தாத்தா..... மஞ்சள் துண்டு is the great father of his family......
ஜே ராம் - மதுரை,இந்தியா
2010-11-06 00:19:55 IST
என்னைக்குப்பா இந்த நிலை மாறும், எத்தனை ஆண்டுதான் ஜாதியை சொல்லி வோட்டு வாங்குவீர்கள்... ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு ஸ்கூல்-ல சொல்லிதர சொல்லிட்டு ஜாதியை சொல்லித்தான் எல்லாமே நடுக்குது.......

கருத்துகள் இல்லை: