சனி, 6 நவம்பர், 2010

அதிமுகவும் இருப்பதை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் ஜெ': திருமா

திட்டக்குடி: சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக கடந்த 5 வருடங்களாகவே ஜெயலலிதா ''ஸ்ரீராம், ஸ்ரீராம்'' என சொல்வது போல் கூறிக் கொண்டிருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுகவும் இருப்பதை வெளிப்படுத்த, உறுதிப்படுத்த வேண்டிய நெருக்கடி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தான் பகுதிவாரி பிரச்சனைகளுக்கு அந்தந்த பகுதி மக்களை திரட்டுவதை விட்டு விட்டு, மாநாட்டுக்கு திரட்டுவது போல் கட்சியினரை திரட்டுவதும், இப்படி ஆர்ப்பாட்டத்தில் திரளும் கூட்டங்களை பார்த்து அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டதாகக் கூறுவதும் திட்டமிட்ட மாயையை உருவாக்கும் செயல்.

நாடு தழுவிய அளவில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்களை கொண்டதாக கூறப்படும் அதிமுக சில லட்சம் தொண்டர்களை திரட்டி தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பது வேடிக்கையாக உள்ளது.

கடந்த 5 வருடங்களாகவே சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று, ஜெயலலிதா ''ஸ்ரீராம், ஸ்ரீராம்'' என சொல்வது போல் சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்றார்.

கருத்துகள் இல்லை: