புதன், 3 நவம்பர், 2010

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன.இந்தப்பழமொழி புலிப்பினாமிகளுக்கு அப்படியே அச்சு

By Teavadai

 அசலாகப்பொருந்துகிறது. வருமானம் நின்றுபோன புலிப்பினாமிகள் செய்து வருகின்ற அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சம்பவம்.  ஜெர்மனியில் டுயிஸ்பேர்க் நகரில் அம்மன் கோவில் ஒன்றை அளவெட்டியைச்சேர்ந்த ஒருவர் உருவாக்கி நடாத்தி வந்துள்ளார். நல்ல மனிசன் சனம் கும்பிட ஒரு கோவிலை தொடங்கிய புண்ணியவான். புலிகள் பலமாக இருந்த காலங்களில் புலிகளுக்கு வளமுள்ள இடங்களில் இருந்த பணம் வருவாய் இருந்ததால் இந்த அம்மன் கோவிலை கண்டு கொள்ளவில்லை. ஆனால் மே 19க்குப் பிறகு பிரபாகரன் மண்டையைப்போட வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. பிறகென்ன சின்ன சின்ன வருவாய் வருகின்ற எல்லாவற்றிலும் புலிகள் கண்ணைப் போடத்தொடங்கினர். பிறகென்ன வந்தது அம்மன் கோவிலுக்கு ஆபத்து. கோவிலை அபகரிக்க புலிகள் முயற்சி செய்தனர். அடாவடி அடிதடியில் இறங்கினர். இறுதியாக பொலிஸ் களத்தில் இறங்கி புலிரவுடிகள் 20பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
வெளிநாட்டில் புலிகளுக்காக இயங்கியவர்களுக்கு தமிழ்மக்கள் மீது எதுவித பற்றும் கிடையாது. காசு பார்க்க புலிஇயக்கத்தை பயன்படுத்தியவர்கள் இந்தப் பன்னாடைகள். காசு வரும் என்றால் எந்தப்பேயின் மூத்திரத்தையும் அருந்தப்பின்னிற்காதவர்கள். வருமானம் நின்றவுடன் இப்போ புலிகள் அடாவடித்தனமான செயல்களில் இறங்கியுள்ளனர். ஊரார் பணத்தில் திண்டு வயிறு வளர்த்த கூட்டம். வேறு என்ன செய்யும். இப்படி கோவில்கள், பொது அமைப்புகள் என வருமானம் வருகின்ற எல்லாவற்றிலும் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைகிறது.
இதுபோல லண்டனிலும் புலிக்காசுகளில் திண்டு கொழுத்த கூட்டம் தமிழர்கள் வைத்திருக்கும் கடைகளிலும் கடன்வாங்கி திண்டு குடித்து சீவிக்கிறது. உடம்பை வருத்தி வேலை செய்து பிழைக்கவும் வக்கற்ற கூட்டம் இது. கள்ள விசா கார்டுகளை வைத்து சீவிக்கிறது. அடுத்தவன் பணத்தை களவாக உருவி திண்டு வீங்கிப்போய் நிற்கிறது.
புலி இல்லாமல் போனதால் தமிழர்களுக்கு இந்த பெருச்சாளிகளால் தலையிடி உருவாகியிருக்கிறது. சமூக விரோதிகள் இதுவரைகாலமும் புலிகளின் நிழலில் ஏதோ தாம்தாம்தான் விடுதலைப்பற்றுள்ளவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் விசுக்கோத்துக்கள் மாதிரியும் திமிர் கொண்டு திரிந்தனர். புலி செத்தவுடன் உண்மையான முகம் தெரிய வருகிறது.
தமிழ்ச்சமூகம் செய்த தவறுக்கு இப்படி தண்டனைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதைத்தான் அறிவுள்ளவர்கள் முன்பே எச்சரித்தார்கள். காதில் ஏறவில்லை. இப்போ இந்த சமூகவிரோதிகளின் தொல்லைகளால் அழுது வடிகிறது. இனியாவது சிந்தித்து செயல்பட்டால் சமூகத்திற்கு நன்மை இல்லாவிட்டால் இப்படியே புலிச்சமூக விரோதிகளினால் சீரழியவேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை: