சனி, 6 நவம்பர், 2010

ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களின் நிலமை தொடர்ந்தும் இடர்பாடுள்ளதாக இருப்பதை நாம் ஏறறுக் கொள்கிறோம்.

ஜேசன் கென்னி- The Globe and Mail
jason kennyகுடியுரிமை, குடியேற்றம், மற்றும் பல்லினக் கலாச்சாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான கனடிய மத்திய அமைச்சர்,ஜேசன் கென்னி அவர்கள் திங்களன்று குளொபல் மெயில் ஆசிரியர் குழுவினரிடம் வருகை தந்திருந்தார். கீழே காணப்படுவது அவரது சந்திப்பின் போது நிகழ்ந்தவற்றின் தணிக்கை செய்யப்பட்ட ஒலி பெயர்ப்பாகும். அது வெளிப்படுத்துவது, அகதிக் கோரிக்கைகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் சம்பந்தமான அரசின் புதிய சட்டவாக்கத்தையும் ஸ்ரீலங்காவிலிருந்து வருகை தரும் அகதிகளின் சமீபத்திய நிலையினையும் .
பல தரப்பட்ட இந்த மனிதக் கடத்தல் நிர்வாகக் குழுக்கள் இந்த வியாபாரத்துக்காக ஒருவருக்கொருவர் போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்ரீலங்காவில் உள்நாட்டுப் போர் நடந்த போது அவர்கள் ஆயதக் கடத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எதிர்ப்பு நிலை முறியடிக்கப் பட்டபின்னர் அவர்கள் புதிய வியாபாரத் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள்.கடத்தல் செய்வதற்கு ஏற்ற ஒரு புதிய வியாபாரப் பண்டமாக மனிதர்களைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் ஆபத்தானதும் பொருத்தமான மிகவும் மோசமான பாதைகளினூடகவும் ஆபத்தான கப்பல்களில் அதுவும் நிராகரிக்கப்பட்ட, நிராகரிக்கப் படவேண்டிய நிலமையிலுள்ள கப்பல்களைப் பயன்படுத்தி கனடாவுக்கு கடத்தி வருவதற்காக மக்களிடமிருந்து சராசரியாக ஒருவருக்கு 50,000 டொலர்கள் வரையில் அறவிடுகிறார்கள்.
கண்ணியமானதும் நியாயமானதுமான கனடாவின் குடிவரவு முறைக்கான மக்களின் ஆதரவையும் முக்கியமாக எமது அகதிகள் பாதுகாப்பு முறைமைக்கும் இது தீவிரமான சவாலை ஏற்படுத்துகிறது. கடைசியாக வந்து சேர்ந்த கப்பலுடன் குடியேற்றத்துக்கான மக்களின் ஆதரவு குறிப்பாக அகதிகள் பாதுகாப்புக்கான பொதுமக்களின் ஆதரவில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இது நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்ட சில விடயங்களாகும். உதாரணத்துக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள எங்கள் பாதுகாப்பு பங்காளர்கள் நம்புவது, இந்தக் கடத்தல் நிர்வாகக் குழுக்களுக்கு கனடாவை இலக்குவைத்து நூற்றுக் கணக்கான பயணிகளை ஏற்றிய பெரிய உருக்கு கப்பல்கள் பலவற்றை ஒரு வருடத்துக்குள் வினியோகிக்கும் கணிப்பிடு தகுதி உள்ளதாக. இது ஒவ்வொரு மாதமும் அல்லது ஒன்று விட்ட ஒரு மாதத்துக்கு நிகழ்வதாக கற்பனை செய்தால்…..? அது அடிப்படையில் குடியேற்றம் மற்றும் அகதிகள் பாதுகாப்பில் உள்ள கனடாவின் நியாயமான அணுகுமுறையின் மீதுள்ள பொதுமக்களின் நம்பிக்கையினையும் ஆதரவினையும் கீழடக்கி விடும். கடத்தல் வலையமைப்பையும் அவர்களிடம் பணம் செலுத்தி கனடா வருவதற்கான கப்பல் பொதியினை வாங்கக் கூடிய தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களின் ஊக்கத்துக்கு தடை செய்வதுமே நாங்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய முக்கியமான பல காரணிகளில் ஒன்று.
பொதுமக்கள் இதில் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்துவதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள். அவர்களுக்கு வேண்டியது நியாயத்தையும் சட்ட விதிகளையும் மேற்கோளாகக் கொண்டு சிறப்பியல்பாக வகுக்கப்பட்ட ஒரு குடியேற்ற முறை. இப்போ நடப்பவை அந்த மேற்கோள்களை மீறிய செய்கையாகக் காண்கிறார்கள். இந்த உணர்வானது புதிய கனடியர்களிடத்து மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை எங்கள் ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. 60 விகிதமான கனடியர்கள் நாங்கள் இந்தப் படகுகளை எங்கள் நீர்பரப்புக்குள் வருவதைத் தடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். அது குறிப்பாகச் சுட்டுவது படைகளைப் பயன்படுத்தி மனித உயிர்களை அபாயத்தில் விடுவது. நாங்கள் அந்த மாதிரியான அபாயச் செயல்களைச் செய்வதற்குத் தீர்மானிக்கவில்லை.
50விகிதத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் வாக்கெடுப்பில் தெரிவித்திருப்பது இந்தக் கப்பலில் உள்ளவர்களை உண்மையான அகதிகளாகக் கருத முடியாமலிருப்பதால் அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று. இதற்குப் பதிலாக நாங்கள் சமப்படுத்தப்பட்ட ஒரு பொதியினை வெளியிடத் தீர்மானித்துள்ளோம். அது சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்ட விதிகளுக்கு அமைவானதாகவும், ஐக்கிய நாடுகளின் அகதிகளின் அமைப்பின்  முக்கிய கடப்பாடுகளுக்கு அமைவாகவும், சித்திரவதை மற்றும் சர்வதேச சட்டங்களின்படி வாழுமிடத்தில் அபாயத்தை எதிர்நோக்கும் நிலை அதாவது ஒருவர் தான் அச்சுறுத்தலுக்கும், உயிர் அபாயத்துக்கும், சித்திரவதைக்கும் உள்ளாகலாம் எனும் நியாயமான அச்சத்தைக் கொண்டிருந்தால் அவரை அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியாது என்பதாகும்;.நாங்கள் தயாரித்துள்ள பொதியும் இப்படியானவற்றைச் செய்யாது.
நான் நினைக்கிறேன் இந்தக் குடியேற்றக்காரர்கள் கனடா வருவதற்கு பலதரப்பட்ட நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். சிலர் முதல் தரமான பொருளாதாரக் குடியேற்றக்காரர்கள். சிலர் உண்மையான அகதிகள். சிலர் பொருளாதாரம் மற்றும் அரசியல்காரணங்கள் இரண்டும் கலந்தவர்கள். சூழ்நிலைக்கு அமைவாக நான் சொல்ல விரும்புவது, ஸ்ரீலங்காவில் பகை நிலமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டபின் இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழந்த சுமார் 100,000 ஸ்ரீலஙகா அகதிகள் தாமாக முன்வந்து ஸ்ரீலங்காவுக்குத் திரும்பியுள்ளார்கள். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் இந்தச் சுயமான நாடு திரும்பலுக்கு தெற்காசியாவிலுள்ள தற்காலிக அகதி நிலையைக் கொண்டிருந்த ஏராளமானவர்களுக்கு உதவிகள் புரிந்துள்ளது. கனடிய எல்லைகள் முகவர் சேவை செய்த ஒரு ஆய்விலிருந்து தெரிய வருவது, கனடாவில் அகதிக் கோரிக்கைகளில் வெற்றியடைந்த ஏராளமான தமிழர்கள் பின்னீடு தாங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவோம் எனக் குற்றச்சாட்டுக் கூறிய நாட்டுக்கு குறைந்தது சாதாரண வருகைக்காகவேனும் சென்று வந்துள்ளார்கள்.
ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களின் நிலை தொடர்ந்தும் இடர்பாடுள்ளதாக இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகம், அவுஸ்திரேலியா மற்றும் பல சர்வதேசப் பங்காளர்களுடன்  இணைந்து ஒரு பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் சாத்தியங்களுக்காக வேலை செய்து வருகிறோம். அது தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றங்களுக்கான நல்ல சந்தர்ப்பங்களை அனுமதிக்கும். சிலர் நினைக்கிறார்கள் நாங்கள் எங்களுடைய எல்லா முட்டைகளையும் அந்தக் கூடைக்குள்ளேயே போட்டு விடுவோம் என்று, ஆனால் உண்மையில் அது நடுப்பகுதியிலிருந்து நீண்டகாலம் வரையான சிறந்த ஒரு தீர்வு. நாங்கள் பயணம் மாறி ஏறும் நாடுகளுடனும் அவர்களின் எல்லைப் பாதுகாப்பு முயற்சிகள் பற்றி வேலை செய்து வருகிறோம்.
 ஒரு கறுபபுச் சந்தை சேவையினை வெட்டிக் குறைக்க வேண்டுமாயின் வழங்கல் பகுதியை மட்டும் கண்காணித்தால் போதாது, இதை எதிர் நோக்கியுள்ள வாடிக்கையாளர்களின் ஊக்கத்தையும் தடை செய்யவேண்டும். இதனால்தான் எங்கள் பிரேரணையில் ஒரு பகுதியாக நாங்கள் குறிப்பிட்டிருப்பது இவ்வாறு அமர்த்தப்பட்ட மனிதக் கடத்தல் முயற்சிகள் மூலமாக வந்து சேர்பவர்களை ஐந்து வருடங்கள் வரை தற்காலிக நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று. விலைகளைக் குறைப்பது மூலம் வியாபார மாதிரிகளை மாற்ற முயல்கிறோம். நாங்கள் நம்புவது அதன் விலை அதன் பெறுமதியிலும் அதிகம் என்று. 50,000 டொலர்கள் என்பது மூன்றாவது உலக நாடொன்றிலிருந்து வருபவர்களுக்கு எண்ணி ஆராய்ந்து பார்க்க முடியாத மிக உயர்ந்த விலை. ஏனெனில் இவர்கள் கணக்குப் போடுவது அது தாங்கள் கனடாவுக்கு குடியேற மட்டுமல்லாது தங்களுடைய குடும்ப அங்கத்தவர்  பலருக்கும் அனுசரணை வழங்குவதற்கும் ஏற்ற திறமையாக.எங்களைப் பொறுத்த மட்டில் அநேகமாக இது ஒரு தனியான பாதிப்புள்ள பகுதியாக எங்கள் பொதியில் உள்ளதுடன் மற்றும் உங்கள் ஆசிரியத் தலையங்கத்தில் நிலைநிறுத்தப் படவேண்டிய செய்தியாகவும் உள்ளது. அடுத்த வருடம் நடைமுறைக்கு வரத்தக்கதாக நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் புதிய புகலிட முறையில் மக்களில் உண்மையான அகதிக் கோரிக்கையாளர்களுக்கு குடியேற்ற அகதிகள் சபையிடமிருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அதற்கான அந்தஸ்து வழங்கப்படும்.
எனவே உண்மையான அகதிகளுக்கு நாங்கள் வழங்கும் தடுப்புக் காவல் காலம் 8 முதல் 12 வாரங்கள் மட்டுமே. நாங்கள் நினைப்பது நியாயமான தனிப்பட்ட பாவனைக்கான தடுப்புக் காவல் கடத்தல்காரர்களால் உண்டாகும் தனித்தன்மையான சவால்களை குறிவைப்பதற்காக என்று.
தமிழ் புகலிடம் தேடியவர்களில் உயர்விகிதத்தினர் ஸ்ரீலங்காவுக்கு சென்று திரும்பியது, அகதிகளைத் தீர்மானிக்கும் விடயத்தில் உள்ள ஒரு பிரச்சினையை எடுத்துரைக்கிறதா?
வெளிப்படையாக குடியேற்ற அகதிகள் சபை சுதந்திரமான நீதி முறைச் சார்புடைய முகவர் நிலையம் அவர்களின் முடிவுகள் பற்றி என்னால் கருத்துக்கூற இயலாது.ஆனாலும் இதை ரசமான ஒரு குறிப்பாக நானும் கருதுகிறேன். எப்படியாயினும் மற்றைய மேற்கத்தைய ஜனநாயக நாடுகளில் சராசரியாக அனுமதிக்கப்படும் ஸ்ரீலங்கா புகலிடக் கோரிக்கையாளர்களின் விகிதம் 20 – 25 ஆகும் ஆனால் குடியேற்ற அகதிகள் சபை இந்த ஆண்டில் இதுவரை அனுமதித்துள்ளது 86 விகிதம் ஆகும்
பல வருடங்களாக கனடிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் கனடிய அரச காவல்துறை ஆகியவை தமிழ் புலிகளின் முன்னணிக் குழவில் ஆhவமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கு தண்டனை வழங்கவும் வழி செய்திருந்தார்கள். இவைகள் விளக்கப்படக்கூடிய அச்சுறுத்தல்கள், குறுகிய மட்டத்தில் இவைகளின் தொடர்புகளை உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே குற்றவியல் நீதி விசாரணைத் தீர்வு இவைகளைத் தடை செய்யுமா? சட்டம் இருப்பது நல்லது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த உங்களால் முடியுமா?
நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கனடிய அரச காவல்துறைக்கு 1500 பேரை மேலதிகமாகச் சேர்த்துள்ளோம். கனடிய எல்லைகள் சேவை முகவர் அமைப்புக்கு 800 பேர்கள் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். கனடிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவிற்குத் தேவையான வளங்களையும் அதிகரித்துக் கொடுத்துள்ளோம். அவை பிரதிபலிப்பது உண்மையில் தாய்லாந்து மற்றும் எல்லைப்புற நாடுகளில் உள்ள திறமையான பல சொத்துக்கள் எங்களிடமிருப்பதை. வழக்கப்படி குற்றம் சுமத்துவது கனடிய அரச காவல் துறையினரின் பொறுப்பாகும். மேலும் அவர்களின் வழியில் அவர்களுக்கான கால எல்லைப்படி விசாரணைகளை மேற்கொள்வதும் அவர்களின் பொறுப்பேயாகும். வெளிப்படையாக நாங்கள் அதில் தலையிடப் போவதில்லை. செயலாற்றுபவர்கள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) மீது குற்றச் சாட்டை மேற்கொள்வதைப் பொறுத்த மட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட பயங்கரவாத இயக்கமாக பட்டியல் படுத்தப்பட்டது, 2006ம் ஆண்டு நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது. எனக்குத் தெரிந்தவரை பாதுகாப்பு முகவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யும்படி லிபரல் அரசாங்கத்திடம் இரண்டு தடவைகள் சிபார்சு செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுத்து விட்டார்கள். உள்நாட்டு அரசியல்தான் இதற்கு வெளிப்படையான காரணம். உங்களிடம் உண்மையாகச் சொல்வதானால் நான் நினைக்கிறேன் அதுதான் முன்னைய லிபரல் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய அவமானச் செயல்.
 எனவே முக்கியமாக நாலே வருடங்கள் மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்களுக்கு புலிகள் மீது கவனம் செலுத்தக் கூடியதாக இருந்தது. நான் நினைக்கிறேன் மேலும் பல கைதுகள் நடைபெற்றதாக. பலர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டதாக நான் சொல்லவில்லை. பல கைதுகள் மொன்ரியலிலும் ரொரான்ரோவிலும் நடைபெற்றன. கனடியப் பக்கத்திலிருந்து ஆட்கடத்தும் நிர்வாகக் குழவில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் மற்றும் கடத்தப்பட்ட ஆட்கள் கனடா வந்து சேர்ந்ததும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதற்கும் ரசகரமான ஒரு கதை இருக்கிறது. ஏனெனில் கடத்தப்படுபவர்கள் அவர்களுக்கான 50,000 டொலர்களில் அடையாளமாக 10 விகிதத்தையே முன்பணமாகச் செலுத்துகிறார்கள். மிகுதி கனடா வந்து சேர்ந்ததும் இந்த கடத்தல் நிர்வாகக் குழவிடம் கையளிப்பதாக ஒரு உடன்படிக்கைப் பத்திரம் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. அவுஸ்திரேலியர்களால் எனக்குச் சொல்லப்பட்டது உதாரணமாக அவர்கள் நம்புவது ஆட்களைக் குற்றச் செயல்களில் ஈடுபடும்படி வற்புறுத்தல் செய்து அந்தக் கடன்பாக்கி பகுதிகளாக அடைக்கப் படுகிறது.
மற்றைய அரசியல்கட்சிகளிடமிருந்து இம மசோதவைப் பற்றி எவ்வாறான பிரதிபலிப்புகள் உள்ளன?
அது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை வாக்கு வன்மையுடன் கூடிய பல எதிர்ப்புகள் இம் மசோதாவுக்கு ஏற்பட்டுள்ளன. ஆனால் அதற்காக அவர்கள் வாக்களிக்கப் போவதில்லை. நான் நினைக்கிறேன் மக்கள் எதைச் சார்ந்து நிற்கிறார்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். நான் நினைக்கிறேன் இம்மாதிரிப் பிரச்சினைகளில் எதிர்கட்சியினர் ஒருவகை தானியங்கி எதிர்வினைத் தன்மையினைக் கொண்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் குடியேற்றத் தொழிற்சாலைகளைப் பற்றிய விமர்சனங்களை எதிரொலிக்கிறார்கள். மேலும் இந்தப் பிரச்சினையில் கருத்திசைவான அணுகுமுறையினை எடுக்காமல் விசேடமாக குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் உண்மையில் நாங்கள் கனடாவில் இந்தப் பிரச்சனை பற்றி சமச்சீரற்ற விவாதத்தைக் கொண்டிருக்கிறோம்.நடைமுறையில் நாங்கள் எந்தப் புகலிடக் கோரிக்கையாளர்களையும் தடுப்புக்காவலில் வைப்பதில்லை என்பதை பெரும்பாலான கனடியர்கள் உணர்வதிலலை. பெரும்பாலும் மற்றைய லிபரல் ஜனநாயகவாதிகள் எல்லோரையும் தடுத்து வைக்கிறார்கள்
கடநத வசந்த காலத்தின்போது, எதிர்கட்சியினருடன் இணைந்து பணியாற்றும் எங்கள் செயற்திறனின் அடிப்படையில் இந்தச் சட்டம் சீ – 11 ல் ஏற்படுத்தியுள்ள ஆக்கபூர்வமான திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்காகவும், அத்தோடு புகலிட முறையில் நல்ல பயன் தரக் கூடிய மறுசீரமைப்பில் கருத்தொருமித்த ஏகமனதான தீர்மானத்தைப் பெறவும் வேண்டி நான் அவர்களுக்கு விளக்கமளித்தேன். எவ்வாறு இந்தச் சட்டவாக்கத்தை இன்னும் பயனுள்ளதாக்க முடியும், எப்படி கனடாவை இலக்கு வைக்கும் கடத்தல்களைத் தடுக்க முடியும் என்கிற ஏதாவது கருத்துக்களை அவர்கள் கொண்டிருப்பார்களேயானால்,அதைக் கூறியிருக்கலாம்…எங்கள் எல்லோருக்கும் காதுகள் இருக்கின்றனவே. எப்படியாயினும் அவர்கள் கொண்டு வரும் திருத்தங்கள் சட்டத்தின் கடுமையை தணியவைக்கும் தன்மையை கொண்டிருந்தால் எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் எதிர்ப்புகள் கருத்தியல்பானதாக இல்லை. அது அடிப்படையில் ஐ.நா.அகதிகளின் ஒப்பந்தத்தையும், வரைமுறையையும் கொண்டிருக்கிறது.சில வகையான அகதிகளை நீண்டகாலம் தடுத்து வைப்பது நீதியற்றது என அவர்கள் சொல்கிறார்கள். அடிப்படையில் எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. ஐ.நா ஒப்பந்தம் தடுப்புக் காவலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.விசேடமாக அவர்களைத் தொடர்பு படுத்திப் பார்க்கும்போது அது கருத்தியல்பானது என நான் உணர்கிறேன். சர்வதேச மன்னிப்புச்சபை ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள். உண்மை என்னவெனில் சர்வதேசச் சட்டம் அங்கீகரிப்பது, அரசாங்கங்கள் அடையாளம் காணப்படாத அகதிகளை தடுத்து வைக்கவும்,அவர்களின் குடியேற்றச் சட்டங்களை நடைமுறைப் படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது எனபதையே. எங்களின் பிரேரணை சட்டத்துக்கு வெளியே உள்ளது என்றால் மற்றைய லிபரல் ஜனநாயக வாதிகளின் தடுப்புக் காவல் முறை சட்டப் பிரிவுகளுக்கு மிக அதிகமாக வெளியே உள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை இந்தப் பிரச்சனையில் தாங்கள் எவவளவு தூரம் சித்தாந்த வாதிகளாக இருக்கிறார்கள் எனபதைப்பற்றிப் பேசுகிறார்கள். நானும் சர்வதேச மன்னிப்புச்சபையில் அங்கம் வகிப்பவனாக இருந்துள்ளேன். நான் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையால் இயக்கப்படும் சங்கத்தில் இருந்தேன்.அப்போது அவர்கள் ஒரு மனித உரிமை அமைப்பாக இருந்தார்கள். உண்மையில் அப்போது அவர்களின் ஆணைகள் வெளிப்படுத்தியது உலகெங்கிலுமுள்ள சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பளிப்பது பற்றியதாக இருந.தது. நாங்கள் செக் குடியரசுக்கும் மெக்ஸிக்கோவுக்கும் விசா தடையை விதித்தபோது எங்களை விமர்சித்து அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். உண்மையில் நீங்கள் அவர்களின் வெளியீட்டை வாசித்தால் கொள்கை அடிப்படையில் அது விசாவுக்கு எதிரானதல்ல,
ஏனெனில் அவர்கள் காண்பது யாராவது பாதுகாப்புத் தேடி கனடா வருவதற்கு இயல்பான தடுப்புச் சுவராக விசா இருப்பதாக. கனடாவில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் கிளை ஆகக் குறைந்தது எங்கள் மனித உரிமைக் கடப்பாடுகளையும் ஒழுங்கு படுத்தப்பட்ட குடியேற்ற முறைக்கும் இடையில் சமநிலைப்படுத்த முயலும்போது உண்மையில் மொத்தமாகக் துண்டிக்கப் பட்டதாக உள்ளது.
நீங்கள் அநேகமாக 5 வருடங்களுக்கு பின்னர் அகதிகள் விடயத்தை மறுபரிசீலனை செய்யப் போவதால் கப்பலில் வந்தவர்கள் அந்த மாதிரியான வழுக்கலான சரிவுக்குட்பட்டவர்கள், ஆனால் நாங்கள் எடுக்கப் போகும் ஒவ்வொரு அகதிகளுக்கும் மற்றும் அரச அனுசரணை வழங்கப் பட்டவர்களுக்கும் இதை நீங்கள் பயன்படுத்தினால் பலரின் விடயங்களில் அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே சில சந்தர்ப்பங்களில் உங்களால் முடிவுகளுக்கு ஏற்ப செயற்பட முடியாமல் போகும்,எனவே அவர்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து பிரஜைகள் ஆகி விடுவார்களில்லையா?
ஆம் அதுதான் அந்த 5 வருட மீள்நோக்கு செய்யக் கூடியது. 5வருடங்களின் பின் அவர்கள் திரும்பவும் குடியேற்ற அகதிகள் சபையிடம் போகலாம் அவர்களின் நாட்டு நிலமை கணிசமான அளவுக்கு முன்னேறியிருக்கா விட்டால் அவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் அத்துடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுசரணை வழங்கலாம். எனவே நான் நினைக்கிறேன். அது எங்களின் ஆர்வத்துக்கும் அவர்களின் நீண்டகால கண்ணியத்துக்கும் இடையிலான ஒரு சமநிலை,அவர்களுக்கு ஒரு உறுதியான தீர்வு வேண்டியிருந்தால் ஆனால் அது அவர்களுக்குச் சொல்வது  இந்த வழியில் கனடா வருவதை தெரிவு செய்யும் முன்னர் இரண்டு தடவை யோசிக்கவும், உங்களுக்கு குடும்ப ஒன்றிணைப்புடன் கூடிய நிரந்தர குடியுரிமை கிடைக்காது. ஆனால் சாத்தியம் நிச்சயமாக உள்ளது.அந்த மக்களுக்கு நாங்கள் உறுதியான தீர்வுடன் கூடிய எங்களது நீண்டகால பாதுகாப்புக்கான தேவைகளை வழங்குவோம். ஆனால் நாங்கள் இதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை. வேறு எந்த நாட்டையும் விட நபர் வாரியான அடிப்படையில் மீள் குடியமர்ந்த ஏராளமான அகதிகளை நாங்கள் அனுமதித்துள்ளோம். மேலும் எங்கள் அரசாங்கம் அதை அதிகரித்தும் வருகிறது. நேர்மையாகச் சொல்வதானால் இதற்காக ஒரு சர்வசன வாக்கெடுப்பு நிகழ்த்தினால் நிச்சயம் அது ஏற்றுக் கொள்ளப்படும்.
மசோதாவை நிறைவேற்ற சமரசம் செய்யக் கூடிய ஒரு வாய்ப்பு ஏற்பட்டால நீங்கள் அதை கவனிக்கத் தயாரா? நீங்கள் அவர்களின் விடயத்தை 5 வருடங்களின் பின் மீள்நோக்கு செய்வதாக இருந்தால்,அவர்கள் ஏற்கனவே குடும்ப வாழ்வை ஆரம்பித்து நல்ல பிரஜைகளாக மாறியிருந்தபோதும் அவர்களின் நாட்டு நிலமையில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தால்…
இந்த மாதிரி நிலமைகளின் கீழ் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விண்ணப்பம் செய்வதற்கான வழிகள் உள்ளன. இது எங்கள் முறைகளில் உள்ள மற்றோர் தாராளத்தன்மை..
மசோதா சட்டத்துக்கு பதிலளிக்க வேண்டிய ஒரு பிரச்சினை. எல்லைகளை வெளியே தள்ளுவதால் அது அதிகப்படியான பிரச்சனை அல்லது செயல்படு திட்டம் ஆகும். எங்கள் அரச முகவர்களுக்கு கனடிய எல்லைகளுக்கு அப்பால் பொதுவாக எந்த ஒரு அதிகாரமும் கிடையாது.
எனவே ஏராளமான ஆட்கள் இதைப்பார்த்து தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஒரு தீவிரமான உதாரணத்தைப் பயன்படுத்தினால்,வோல்ட் ஸ்ரீட் ஜேணலின் முன்புறத்தில் யேமனில் உள்ள பயங்பரவாதத் தலைவர்களை கொலை செய்வதற்காக அமெரிக்கா விசேட படைகளை அனுப்பியுள்ளது என்றிருக்கும் ஆனால் தென் கிழக்கு ஆசியாவில் அது நடக்கப் போவதில்லை. ஆனால் நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்.எப்போது நாங்கள் எல்லைகளை வெளியே தள்ளப் போகிறோம்? கடத்தல் வலையமைப்பினை தடை செய்வதற்காக நாங்கள் முயற்சி செய்கிறோமா? படகின் இயந்திரத்தை நிறுத்தப் போகிறோமா?
செயல்படும் முறைகளின் விபரங்கள் பற்றி என்னால் கருத்து எதுவும் கூறமுடியாது.நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். எங்கள் காவல்துறையினர் வெளிநாடுகளில் சர்வதேசச் சட்டங்களின்படியும் அந்த நாட்டுச் சட்டங்களின்படியும் கடமையாற்றுகிறார்கள்.மற்றும் ஏதாவது உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டிய செயல் இடம் பெற வேண்டுமாயின் அது உள்நாட்டு காவல்துறையினராலேயே மேற்கொள்ளப்படும். எனவே அது மெய்யாகவே ஒரு பங்காளித் தன்மையை உள்நாட்டு காவல்துறையினரினதும் புலனாய்வுத் துறையினரினதும் பங்களிப்புடன் கட்டியெழுப்புவதாகும். அடுத்தவர்களின் துணையுடன் அதை நிறுத்துவதை நீங்கள் காணலாம்.
நீங்கள் சொன்னீர்கள் இங்கு வரவிருக்கும் தமிழர்கள் மொத்தமாக 250 பேர்கள் இரண்டு தடவைகள் சுற்றி வளைக்கப் பட்டதாக. அதைப்பற்றி அறிவதற்கு முக்கியமாக உங்களுக்கு ஏதாவது வழிகள் உள்ளனவா?
இந்தக் கடத்தல் வலையமைப்பை பற்றிய தகவல்களை அறிவதற்கு திறமையான புலனாய்வாளர்கள் அங்கு உள்ளனர். அதைப்பற்றி விளக்கமாக எதுவும் கூற முடியாது. ஆனால் அவர்களுக்குத் தெரியவேண்டியது நாங்களும் எங்கள் பங்காளர்களும் அவர்களை நோக்கியபடி இருக்கிறோம் என்பதை.
(நன்றி : The Globe and Mail)
தமிழில். எஸ்.குமார்
 

கருத்துகள் இல்லை: