வெள்ளி, 5 நவம்பர், 2010

மாணவியை விட்டு பிரியாத சிட்டுக்குருவி


 
ஊட்டி அருகேயுள்ள இந்து நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்திகா (13). இவள் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அருகேயுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிம் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த 2 மாதத்துக்கு முன் கீர்த்திகா பள்ளிக்கு சென்றாள். செல்லும் வழியில் சிட்டுக் குருவி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.அதனை அன்போது தனது இல்லத்துக்கு எடுத்து வந்தாள் கீர்த்திகா.

தனது உடன் பிறந்த சகோதரியாக அதனை அன்போடு கவனித்து வளர்த்து வந்தாள். அதற்கென தனிக் கூண்டு அமைத்து கண்ணை இமை காப்பது போல் பார்த்துக் கொண்டாள்.

கீர்த்திகாவின் சீரிய முயற்சியாலும், அவள் காட்டிய கருணையாலும் சிட்டுக்குருவி சீரான வளர்ச்சி பெற்றது
தற்போது கீர்த்திகாவின் தோழியாகவே மாறி விட்டது.

கருத்துகள் இல்லை: