அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,’தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலை ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம் செய்துள்ளனர். இந்தவிடயம் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறான இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றை இரத்துச் செய்ய வேண்டும். டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஆசிரியர் இடமாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.அதேவேளை நாட்டின் 326 தேசிய பாடசாலைகளின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய கல்வி அமைச்சின் 20 கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக