வெள்ளி, 9 அக்டோபர், 2020

திருமாவளவன் பெரியாரை கொச்சை படுத்தி பேசினார்?

 Kanimozhi MV : திராவிடர் இயக்கத்தில் பிறந்தது முதல் அறிமுகமான எனக்கு தனிப்பட்ட தாக்குதல் உணர்வு என எதைச் சொல்கிறீர்கள்?
ஆசிரியர் திருமா : இல்லாத திராவிடம்..

ஒரு கருத்து படிக்க கிடைக்கிறது அதை என் முகநூலில் பதிய எனக்கு அனைத்து உரிமையும் உள்ளது
நான் பொய்யை பதியவில்லையே?
முரசொலியில் அய்யாவை எதிர்த்து எழுதியதை எல்லாம் பதியலாமா? என்கிறீர்கள்,
தாரளமாக பதியலாம்!  வரலாறு எதையும் மறைத்து வைப்பது இல்லையே
ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமா அவர் பெரியார் என்ற நூலில் அனைத்து செய்திகளும் உள்ளதே?   எதை நாம் மறைத்து வைத்தோம் ?
பெரியாரை இரண்டாம் நிலையில் வைத்து போகிறபோக்கில் பேசிவிட்டு போகிறார்கள் என்றால் அதைத் தட்டிக்கேட்க நமக்கு கூச்சமாக இருக்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய இழுக்கு?!
என் தனிப்பட்ட உணர்வு என்ன என்பதை நீங்கள் விளக்கியே தீர வேண்டும் !
ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருக்க கேடுகெட்ட உறவுகளிடமிருந்து கூட எட்டி நிற்கிறவள் நான் , என் தனிப்பட்ட உணர்வு என்பது என் கொள்கை மட்டுமேபெரியார் மட்டுமே
அதற்கு திராவிடர் இயக்கத்தில் இருப்பவர்களே களங்கம் கற்பிப்பீர்கள் என்றால் விளக்க வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது
என்ன என் தனிப்பட்ட உணர்வு ?!

Isai Inban : இதெல்லாம் இப்ப எடுத்துப்போட வேண்டுமா?   

Kanimozhi MV :  ஏன் போடக்கூடாது ? இதுவரை நான் இதை பார்த்தது இல்லை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது பெரியாரை புரட்சியாளர் அல்ல எனும் சொல்லும்போதும் அமைதியாக போக வேண்டுமா அண்ணா ? 

Isai Inban :  திமுகவினர் அய்யாவை அந்த காலத்தில் அசிங்கப்படுத்தி போட்டதையெல்லாம் இப்போது போடலாமா? உங்களுடைய தனிப்பட்ட தாக்குதல் உணர்வுகளுக்கு முகநூலை தளமாக்காதீர்கள். எத்தனையோ மாறுபட்ட கருத்துகள் நிலவிக் கொண்டேயிருக்கும். அதை இயல்பாக கடக்கப் பழகுங்கள். பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பதிவிட வேண்டாம். 

Isai Inban : இதற்கெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் தந்தை இறையனார் போன்றவர்கள் மயிலாப்பூரில் கூட்டம் போட்டு மிகக் கடுமையாக எச்சரித்த வரலாறெல்லாம் உண்டு. 

Kanimozhi MV:  தாரளமாக போடலாம் எதையும் விவாதிக்காமல் மூடி மறைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை முரசொலியில் வந்த பெரியார் பற்றிய எதிர்ப்பு கருத்துகளை பெரும்பாலும் தோழர் திருமாவேலன் ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமா அவர் பெரியார் என்ற நூலில் எடுத்து தந்திருக்கிறார் பின்விளைவுகள் எதுவாக இருக்கும்? பெரியாரை கொச்சைப்படுத்தினாலும் கேட்டுக்கொண்டு போக என் வரை நான் பெரியார் இல்லை நான் அவரின் தொண்டர் தான் எனக்கு கோபம் வரவே செய்யும் எனக்கு என்ன தனிப்பட்ட தாக்குதல் உணர்வு? திராவிடர் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட தாக்குதல் உணர்வு என நீங்கள் எந்த உணர்வைகூறுகிறார்கள்? அப்போது நீங்கள் அவருக்கு ஆதரவாக பதிவிடுவது உங்களின் தனிப்பட்ட ஆதரவு உணர்வு என நான் சொல்லாம் தானே? இந்த தனிப்பட்ட தாக்குதல் உணர்வு என்று என்னை நோக்கி சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன் ..

தோழர் ரேவா: 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து நாம குஜராத்தை எல்லாம் உதாரணமாக காட்டி பேசிட்டு இருந்த போது மோடி வந்தா எல்லாம் மாறும் னு மோடி அலைக்கு தீவிர பிரச்சாரம் செய்தவர் நம்ம மிகச்சிறந்த பேச்சாளர் திரு.வைகோ அவர்கள். அதன் பின்பு அவரே நம்முடைய மேடைகளிலும் பிற மேடைகளிலும் கூட மோடியை முதல் ஆளாக எதிரிப்பதாய் காட்டிக்கொள்ளும் போது. திராவிட இயக்க போர்வாள் னு பெருமையா சொல்லி வாழ்த்தி கொண்டாடுவதில்லையா... அது போல இந்த தவறுகளையும் பொருத்து கொள்வோம் அக்கா 

Isai Inban : பெரியாரை கொச்சைப் படுத்த நினைப்பவன் வேண்டுமென்றே செய்வான். அவனுக்கு தெரியும் பதிலுக்கு இப்படி மோதல்கள் நடக்குமென்று. 

Kanimozhi MV :  செய்ததே திருமா தான் 

Tholar Panther :;  Did you watch his full speech? did he say Periyar is not? 

Kanimozhi MV :  I watched I think he spoke in Tamil so I don’t want உரை for that thozhar 

Tholar Panther :  Yes he did speak in tamil... Naan paartha version la appadi sonnadha therla .. adhan kettan. 

Kanimozhi MV :  I felt the other way so to speak in a way allowed to be interpreted itself is biggest mistake Periyarists are all muffons Only ppl who play the game are very intelligent and intellectuals . 

Tholar Panther : He is responsible for what he spoke and he cant be for what and how other's interpret ... Muffons means?

 Ravikumar Vaithilingam : அப்போ இல்ல ஆனால் இப்போது இருக்கு ...

 Kanimozhi MV :   2004 இல் திராவிடம் இல்லையா? 

Senthamizh Selvan அப்றம் புரிஞசிக்கிட்டாரு.     

கருத்துகள் இல்லை: