புதன், 7 அக்டோபர், 2020

எடப்பாடி பழனிசாமி பெயரை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்

 maalaimalar :  சென்னை: 2021 சட்டசபை தேர்தல் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- கேள்வி:- முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்:- எடப்பாடி பழனிசாமி பெயரை நான் மகிழ்ச்சியோடு அறிவித்து உள்ளேன். கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? பதில்:- எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. கேள்வி:- அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவுக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன? பதில்:- என்ன அதிகாரம் என்பது அ.தி.மு.க. சட்ட விதிகளில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: