செவ்வாய், 6 அக்டோபர், 2020

விசிகவின் ‘ஆதிதிராவிடராய்... சமூகவலையில் நுட்பமான விவாதங்கள்

Kathiravan Mayavan : · ■ ஆதி திராவிடராய் இணைவோம், ■ அருந்ததியராய் ஒன்றிணைவோம், ■ பள்ளராக ஒன்றிணைவோம். ■ உடையராய் ஒன்றிணைவோம் ■ நாடாராய் ஒன்றிணைவோம். ■ வன்னிய குல சத்திரியர்களாக இணைவோம், ■முக்குலோத்தோராக இணைவோம், ■ யாதவராய் இணைவோம் . .... இன்னும் எப்படியெல்லாம் தனி தனியாக ஜாதியாக ஒன்றிணைவது என்பதை (தலித் கட்சி)களிடம் இருந்து தமிழகம் பாடம் கற்று கொள்ள வேண்டும். 

Mani Mathivannan : விசிக பொதுச் செயலாளர் துவக்கிய ஆதி திராவிடராய் ஒருங்கிணைவோம் குறித்து பல்வேறு மட்டங்களிலும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 
அவர்களது கட்சிக்கு ஒரு நிலை எடுக்க உரிமை இருக்கிறது. அந்நிலை அவர்களைத் தவிர மற்றவர்களையும் பாதிக்குமெனில் நாம் அந்நிலைபாடு குறித்த நமது பார்வையை முன்வைக்க வேண்டியதாகி விடுகிறது. ரவிக்குமாரின் ஆதரவாளர்களால் ஆதி திராவிடர்களாய்த் தானே ஒன்றிணையச் சொன்னார் அதில் என்ன பிழை இருக்கிறது என ஒரு வாதம் முன் வைக்கப் படுகிறது. 
ஆதி திராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியையோ அதன் சார்பான சாதிகளையோ குறிப்பிடும் பெயரல்ல. அரசாணை பிறப்பிக்கப் படும் போதே சென்னை மாகாணத்திலுள்ள தமிழ்ப் பேசும் பகுதிகளில் அன்றைய பட்டியல் சாதிகள் அனைத்தையும் குறிப்பிடும் பெயராகவே அது குறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பட்டியல் சாதியினர் நலன்களைப் பேணும் துறைக்கு ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயர் வழங்கப் படுகிறது. அதை ஒட்டியே சென்னையைச் சுற்றியுள்ள வட மாவட்டங்களில் தொன்னூறு சதவீதத்துக்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஆதி திராவிடர் எனற பெயரில் கணக்கு எடுக்கப் பட்டுள்ளனர். 
இவர்கள் அனைவரும் - பெரும்பான்மையோர் அல்ல அனைவரும்- பறையர் என்கின்ற குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களே எனறு உரிமை கோரும் உத்தியை ரவிக்குமாரின் வாதம் கொண்டுள்ளது. 
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மத்திய அரசு செய்வது மாநில அரசுப் பணியாளர்களைக் கொண்டு. அதனால் அது அவ்வளவு துல்லியமானதாக இருக்காது. 
புதிரை வண்ணார்கள் மத்தியில் இயங்கும் தலைவர்கள் தங்களது எண்ணிக்கையாக சென்சஸ் குறிப்பிடுவது மிகமிகத் தவறானது என்கின்றனர். அருந்ததியர் எண்ணிக்கையும் அவ்வாறே மிகத் தவறானது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமே 3000 பேரே அருந்ததியர் இருப்பதாக அறியத்  தருகிறது. இது மிகத் தவறானது. ரவிக்குமாரின் இம்முயற்சி தேர்தலில் தமக்குக் கூடுதல் சீட்டுகளைக் கோரும் முயற்சியில் ஆனதாக இருக்கலாம். ஆனால், யதார்த்தத்தில் அதன் விளைவு வேறு மாதிரியானதாகவே இருக்கும். 
 
Ravishankar Ayyakkannu  : மதிப்பிற்குரிய திரு. ரவிக்குமார் MP அவர்களே,

1. SC மக்கள் தொகைக்கு ஈடாக இட ஒதுக்கீட்டில் துல்லியமாகப் பங்கு வழங்க வேண்டும் என்று சட்டமோ வழிகாட்டு நெறிகளோ உள்ளனவா?
2. இதே போல், OBC (BC+MBC) இட ஒதுக்கீட்டையும் மாநிலத்திலும் மத்தியிலும் அவர்கள் மக்கள் தொகைக்கு ஈடாக உயர்த்த ஆதரவு அளிக்கிறீர்களா?
3. 1981ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் SC மக்கள் தொகை 18.5%. அது 30 ஆண்டுகள் கழித்து 2011ல் தான் 20% ஆகிறது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் குறைந்து கொண்டே போகும் இந்தக் காலத்தில், அது எப்படி கடந்த 10 ஆண்டுகளில் இன்னும் ஒரு 1% ஏறி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
4. நீங்கள் உயர்த்திக் கேட்கும் இந்த 3% என்பது அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்குக் கொடுத்த 3% உடன் ஒத்துப் போவது தற்செயல் தானா?
5. ஆதி திராவிடராய் ஒன்று படுவோம் என்று அழைக்கும் போது அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர்களைச் சேர்த்துக் கொள்ளாத நீங்கள், இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கும் மட்டும் அவர்களை இணைத்துக் கொள்வது ஏன்?    விசிகவின் ‘ஆதிதிராவிடராய்   
6. 69% க்கு மேல் 1% கூட இட ஒதுக்கீட்டை உயர்த்த இயலாத நிலையில், அரசு உங்கள் கோரிக்கையை எவ்விதம் நடைமுறைப்படுத்த இயலும் என்று கருதுகிறீர்கள்?
ஒரு வேளை உயர்த்தும் பட்சத்தில், தற்போது இருக்கிற 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் வராது என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
7. அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்பது SCக்களுக்குத் தரப்பட்ட 18%ல் 16% உள் ஒதுக்கீடு. அது தான் ஒட்டு மொத்த நூறு இடங்களில் 3% ஆக தரப்பட்டது. தற்போது, நீங்கள் SC இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரும் போது, அவர்களுக்கும் அதே கணக்கில் 0.5% உள் ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். இதற்குச் சம்மதமா?

 Karuppu Neelakandan : · பெரியார் மீது அவதூறு சேற்றை வீசத் தொடங்கிய 2000ஆம் ஆண்டு காலத்திலிருந்தே தன் விவாதங்களை மறுப்பவர்களுக்கு வலிந்து ஜாதி முத்திரை குத்தி அசிங்கப்படுத்தும் அதிகார தாசில்தார் வேலை விசிக வின் பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமாருக்கு கைவந்த கலையாகும். 'ஆதி திராவிடராய் இணைவோம்' என்கிற பெயரில் இப்போது அவர் விடுக்கும் 'பறையர் அரசியல் ' அழைப்பை அண்ணல் அம்பேத்கர் ஒளியின் கீழ்நின்று கச்சிதமாய் நேர்த்தியாய் கட்டுடைத்து கேள்வி கேட்கும் தலித் முரசு வின் ஆசிரியர் புனிதபாண்டியனை நேற்று ஜாதிப்பட்டியலுக்குள் அடைத்துக்காட்டி அவரது முகநூல் பதிவொன்றில் பின்னூட்டமிட்டு கொச்சைப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

 ஜாதிஒழிப்பை இயக்கமாய் கொண்டியங்கும் நண்பர்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட இது. ' தலித் ' 'போதி' 'மணற்கேணி ' என விடுதலை சிந்தனை அடையாளங்களை தான் நடத்தும் பத்திரிகைகளுக்கு பெயரிட்டுக்கொண்டும் அழகுபார்த்துக்கொண்டும் உலா வந்தால் மட்டும் போதாது ரவிக்குமார் அய்யா அவர்களே அதன் பண்பில் மனவிடுதலையோடு உயிர்த்திருக்கவேண்டும். பெரியாரியமும் அம்பேத்கரியுமுமே வெல்லும். ஜாதியவாதங்கள் ஒரு போதும் வெல்லாது.!! 

 Ravishankar Ayyakkannu : விசிக தங்களைப் பொது நீரோட்டக் கட்சி என்று சொன்னால் மட்டும் போதாது. கிடைக்கிற தொகுதிகளில் அவர்கள் யாரை நிற்க வைக்கிறார்கள் என்பதும் முக்கியம். கிடைத்த 2 MP சீட்களையும் ஒரே சாதிக்கு வழங்கி விட்டு, எங்களைச் சாதிக் கட்சியாகப் பார்க்காதீர்கள் என்றால் என்ன அர்த்தம்? ·

பட்டியல் சாதியினர் ஆதி திராவிடர்களாக ஒன்றிணையும் போது, சாதியின் பெயர் மாறுகிறதே ஒழிய, சாதி ஒழிவதில்லை. இந்து சமயத்தை விடுத்து பௌத்தம் தழுவுவதே சாதி ஒழிப்புக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். சிலர் இந்த வழியை விட்டு விட்டு, போகாத ஊருக்கு மற்ற எல்லா வழிகளையும் காட்டுவது ஏன்? அவர்கள் நோக்கம் சாதி ஒழிப்பா? பல்வேறு சாதிகளைத் திரட்டி அரசியலில் பேரம் பேசுவதா? 

இன்று பட்டியல் வகுப்பினருக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தேர்தலில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சட்டத் திருத்தமே! அவர்களை விட கூடுதல் மக்கள் தொகை உள்ள OBC க்கள் ஏமாந்த ஏப்ரல் foolகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, எந்த ஒரு பாலின, சாதி, மதப் பிரிவிற்கும் தேர்தல் தொகுதிகள், அமைச்சரவைப் பொறுப்புகள், அரசு பணியிடங்களில் பதவி உயர்வு பெற, எண்ணிக்கையை வைத்துப் பேரம் பேசலாம் என்ற மலிவான அரசியலை விடுத்து, தேசிய அளவிலான சட்டத் திருத்தங்கள் குறித்தே நாம் இயங்க வேண்டும். அதுவே, நிரந்தரமான தீர்வு! 

பட்டியல் வகுப்பினர் பிரிந்து நின்றால் அது பாஜகவுக்கு இலாபம் என்கிறார் திரு. ரவிக்குமார் MP. ஆதித்தமிழர் பேரவை எந்தக் கட்சியை ஆதரிக்கிறது? ஒட்டு மொத்த தலித்களுக்குத் தாங்கள் மட்டும் தான் அத்தாரிட்டி என்று சீன் போடுகிற கட்சிகள் தான், பட்டியல் வகுப்பினர் பிரிந்து செல்வதைப் பற்றிக் கவலைப்படுவார்கள். அருந்ததியர் இட ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில், நீதிபதி ஜனார்த்தனம், * பள்ளர்கள் * பறையர்கள் / ஆதி திராவிடர்கள் / இதர SC சாதியினர் * அருந்ததியர்கள் என்றே சாதி அடுக்கு அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். 

சாதி அடுக்கில் மேலே உள்ள பள்ளர்களையும் கீழே உள்ள அருந்ததியர்களையும் சேர்த்துக் கொள்ளாமல், இடையே உள்ள மற்ற சாதிகள் எல்லாம் ஓரணியாகத் திரள்வோம் என்பதற்குப் பெயர் தான் சாதி ஒழிப்பா? இதைத் தானே இத்தனை நாட்களாக OBC சூத்திர சாதி வெறி என்று கூறி வந்தீர்கள்?   இப்போது அதே உத்தியை நீங்கள் பயன்படுத்துவது கூட பரவாயில்லை. ஆனால், தயவு செய்து இதனைச் சாதி ஒழிப்பு என்று மட்டும் கூறாதீர்கள். 

 

மாயாவதியின் ஜாதவ் சாதிக்கு எதிராக பிற பட்டியல் சாதி மக்களை பாஜக திருப்பி விட்டிருக்கிறது. அதனால் மாயாவதி செல்வாக்கு இழந்து வருவது போல் தமிழ்நாட்டிலும் (விசிகவுக்கு) நேரக்கூடாது. ஆகவே தான் 60 சாதிகளை ஆதி திராவிடராய் ஒன்றிணையக் கோருகிறோம் என்று ரவிக்குமார் வெளிப்படையாகவே கவலைப்படுகிறார். கத்தி எடுத்துவனுக்குக் கத்தியால் தான் சாவு என்பது போல், சாதியை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்கு சாதியால் தான் தோல்வி வரும். சாதி கடந்து, தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் அரசியல் செய்கிறவர்கள் மட்டும் தான் இங்கு வெல்ல முடியும். இதற்குப் பெயர் திராவிட அரசியல்! 

 பாமக, புதிய தமிழகம் செய்வது சாதி அரசியல் என்று சொல்ல முடிகிறவர்களால், விசிகவைப் பார்த்து ஏன் சொல்ல முடியவில்லை? 

 Nilavinian Manickam : தலித்திய அடையாளசாதியான அருந்ததியினர் மீது செலுத்தும் ஆதிக்கமெல்லாம் கேள்விப்படலையா.. இன்னும் சந்தையூர் தீண்டாமைச்சுவர் இளிச்சபடியேதான் இருக்கு..இப்படி இருந்துகிட்டு அடுத்தவனுக்கு பாடம் எடுக்கிறதுதான் நகைப்பு. 


பெரியார் நேசன் : · கலைஞர் எங்களை பார்த்து சாதியை சொல்லி உங்களுக்கு பொது தொகுதி கொடுக்க முடியாது அதனால் தனித்தொகுதி எடுத்துக்கோங்க அப்டினு ஒரு தனியார் நியூஸ் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்ததும் இல்லாமல் பல இடங்களில் பதிவு செய்தார் விசிக,வின் வன்னியர்அரசு.. அதற்கு எந்த இடத்திலும் மறுப்பு தெரிவிக்காமல் பல வருடம் மெளனம் காத்து திமுக கூட்டணியில் இடம் பெற்ற பின்பு..இல்லை கலைஞர் அப்படி சொல்லவில்லை என மறுத்தார் திருமா... அதே போல் இன்று..கலைஞர் கொண்டு வந்த அருந்த்தியர் உள் இட ஒதுக்கீடை தவறெனவும் ஆதிதிராவிடர்கள் பறையர்கள் மட்டுமே எனவும் கலைஞரின் திட்டங்களை குறை சொல்கிறார்.,விசிக,வில் உறுப்பினராய் இருந்தும் திமுக சின்னத்தால் விசிகாவின் தலைவர் அண்ணன் திருமாவை விடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ரவிக்குமார் அவர்கள்.. ஒருவேளை கட்சியின் உறுப்பினர்கள் மற்ற தலைவர்கள் திருமாவின் பேச்சை கேட்பதில்லையா..!? அல்லது உட்கட்சி பூசலா..!? அல்லது தெரிந்தே திமுக,வை பலிசாடும் நோக்கமா..!?! கட்சி முடிவுகள் தலைவரின் கையில் இல்லையா..!?! அல்லது கூட்டணியை பலி சொல்லி இடங்கள் அதிகம் பெற எடுக்கும் முன்னெடுப்பா..!? காத்திருப்போம்...

கருத்துகள் இல்லை: