வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மருத்துவர்களுக்கு .. மயானத்தில் இடம் தர மறுத்தவர்களுக்கு ஒரு மருத்துவரின் ...


Drprakash Surgeon Thanjavur : நேற்று குடல் ஓட்டை விழுந்து
அதனால் சீல் பிடித்து குழந்தையின் கர்ப்ப பை முழுவதும்
சீல் பிடித்து இருந்ததை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தோம் . இது முழுக்க முழுக்க infection தான் . அதற்கு பிறகு icu சென்று ஒரு குழந்தைக்கு நுரைஈரல் முழுவதும் சீல் பிடித்து , அதை ஊசி மூலம் எடுக்க முடியாததால் அறுவை சிகிச்சை நிபுணர் என்னை அழைத்தனர். காச நோயாளியான தனது தாத்தா மூலம் இந்த குழந்தைக்கு கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது
கண்டிப்பாக அந்த சீலில் காச நோய் கிருமி இருக்கும்
இதற்கு தீர்வு icd எனப்படும் சிகிச்சை தான் விலா எலும்புக்கு நடுவில் பிளாஸ்டிக் tube மூலமாக அந்த சீலை எடுக்க வேண்டும் / "என் மூஞ்சில இருமி டாத பாப்பா "னு சொல்லிட்டு Procedure ஆரம்பித்தேன்
Tube நுரை ஈரல அருகில் சென்றதும் துர்நாற்றமும் , சலமும் என் மீதும் செவிலியர் மீதும் தெறித்தது துர்நாற்றத்தில் மூச்சு விட முடியவில்லை , கண்டிப்பாக அதில் காச நோய் கிருமி இருக்கும் . பிறகு tube வழியாக சீல் வடிய தொடங்கியது ,
வடிந்த சீலை ஒரு ஊசியில் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார் பயிற்சி மருத்துவர் மாஸ்க்கை கலட்டி விட்டு முகத்தை கழுவி விட்டு மற்ற வேலைகளை பார்த்தேன்
வீடு வரும் வரை காச நோய் தொற்று ஏற்பட்டு 9 மாதங்கள் டிபி மாத்திரை சாப்பிட்ட மருத்துவ நண்பன் ஞாபகம் வந்து போனது ...
ஏதோ கொரோனா என்ற கிருமி வந்த பிறகு தான் எங்களுக்கு infection வருகிறது என்று இல்லை.

காலம் முழுவதும் கால் களை சுற்றிய பாம்பாக பல கிருமி தொற்று ஆபத்து எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது
காச நோய் முதல் எய்ட்ஸ் வரை நோயாளி யிடம் இருந்து வருடம் முழுவதும் பரிசாக பெற்று கொண்டு தான் இருக்கிறோம்
இதில் லேட்டஸ்ட் addition கொரோனா , அவ்வளவு தான்
எந்த மருத்துவரும் infection கொடுத்த நோயாளியை குற்றம் சாட்டியது இல்லை
ஏன் ???
அது தான் எங்களுக்கும் மயானத்தில் இடம் தர மறுத்த உங்களுக்கும் உள்ள வித்தியாசம் !!!

கருத்துகள் இல்லை: