திங்கள், 13 ஏப்ரல், 2020

சென்னையில் 208 பேருக்கு கொரோனா... பீலா ராஜேஷ் சுகாதார செயலர்

tamil.samayam.com : பீலா ராஜேஷ் தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றோடு 1,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 63,380 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. வீட்டு கண்காணிப்பில் 33,850 பேரும் 136 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 208 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.
தற்போது வரை கொரோனாவால் எந்தந்த மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, தீவிரமாக கண்காணிக்கக்கூடிய இடங்கள் என்னென்ன, அங்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் இயங்கி வருகின்றன.

ஊரடங்கு நீட்டிப்பு: 2வது முறையாக ரூ.1000 நிவாரணம்..! அத்தியாவசிய பொருட்கள் இலவசம்

நோய் தொற்றை பரிசோதிக்க போதுமான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளது. மேலும் கூடுதலான வெண்டிலேட்டர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பிற்காலத்தில் தீவிர மடைந்தால் என்னென்ன யுக்திகளை கையாள வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: