வெள்ளி, 17 ஏப்ரல், 2020

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை


தினத்தந்தி :சென்னை, தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு 40 -க்கும் கீழே இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 180-ல் இருந்து 283 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை: