வெள்ளி, 16 நவம்பர், 2018

கஜா புயல் முழுமையாக கரையைக் கடந்தது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தினத்தந்தி : கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது. கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது
கஜா புயல் காரணமாக பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலுர், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர், தேனி, விழுப்புரம், திருச்சி,  கரூர், திண்டுக்கல்,  காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், தூத்துக்குடி , சேலம் ,  ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: