ஞாயிறு, 11 நவம்பர், 2018

அஸ்கிரிய - மல்வத்து பௌத்த தலைவர்களும் சிரிசேனவை சந்திக்க விரும்பவில்லை.

Ajeevan Veer : அஸ்கிரிய மற்றும் மல்வத்து ஆகிய இரு தலைமை பௌத்த
தலைவர்களும் சிரிசேனவை சந்திக்க விரும்பவில்லை.
இலங்கை வரலாற்றிலேயே ஒரு அரச தலைவரை பௌத்த தலைமை தலைவர்கள் சந்திக்க மறுத்த முதல் நிகழ்வு இதுவாகும்.
அஸ்கிரிய மல்வத்த
நேற்றைய தினம் சிரிசேன இவர்களை சந்திக்க கண்டிக்கு சென்றார். ஆனால் அவர்கள் சிரிசேனவை பார்க்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டார்கள். நாட்டை சீர் குலைப்பதற்காக சதி செய்த ஒரு நாசதாரியை அவர்கள் சந்திக்காமல் விட்டது புதுமையல்ல.
சிலர் நினைக்கலாம் சிரிசேனவிடம் செய்தது தவறு என சுட்டிக் காட்டலாம் என்று? ஆனால் அவர்களிடம் கேட்டா ஆட்சியை கலைத்தார்? இது சிரிசேனவுக்கு ஒரு பலத்த அடியாகும். உண்மையான பௌத்த சமூகம் சிரிசேனவை இனி தூசுக்கு கூட மதிக்காது. சர்வதேச தடைகளை விட இது ஒரு பாரிய அடியாகும்.
ஏற்கனேவே அரசியல் யாப்பில் உள்ள சட்டத்தின்படி நடந்து கொள்ளுமாறு மாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<

கருத்துகள் இல்லை: