வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பாலியல் வன்முறை..வளைகுடா நாடுகளுக்கு நேபாள அரசு தடை

காத்மாண்டு: 30வயதுக்‌கு கீழ் உள்ள பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
இது குறித்து அந்நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கிஷோர் ‌யாதவ் கூறியதாவது: நேபாள நாட்டைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவான பெண்கள் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வீட்டு பணிப்பபெண்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார் வருவதையடுத்து அமைச்சரவை இம் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‌‌ வளைகுடா நாடுகளில் நேபாள நாட்டு பெண்கள் தவிர இலங்கை , பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டை சேர்ந்த பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேபாள நாட்டு அரசு மட்டு‌மே 30 வயதுக்குட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிய தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏற்கனவே இந்ததடை 1998 -ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 2010-ம் ஆண்டு விலக்கிக்‌கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் அந்த தடை அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: