செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அசாம் : மடிந்த உயிர்களும் மறைந்த உண்மைகளும்


கலவரங்கள் இரு வகைப்படும். திட்டமிட்ட கலவரம், திடீர் கலவரம். முதல் வகை, லாப நோக்கத்தோடு அரங்கேறும். அடையவேண்டிய இலக்குகள் சரியாக நிர்ணயிக்கப்பட்டு, மிகச் சாதுரியமாக காய்கள் நகர்த்தப்பட்டு, என்ன நடந்தது என்றே தெரியாதபடி மக்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள். 
கடந்த மாதம் அசாமில் நிகழ்ந்தது இந்த வகை கலவரம்தான்.
ஜூலை 19 அன்று கொக்ரஜார் (Kokrajhar) மாவட்டத்தில் சில போடோ இன மக்கள் வசிக்கும் வீடுகள்மீது, வங்கதேசத்தினர் கல்வீசித் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை விசாரிக்க, சரணடைந்த நான்கு போடோ தீவிரவாதிகள் ஜூலை 20 அன்று அந்த வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை ஊடுருவி, வங்கதேசத்தினரைக் கொன்றனர். இதுதான் கலவரத்தின் ஆரம்பம்.
இக்கலவரம் ஜூலை 27 வரை 400 கிராமங்களுக்குப் பரவி 59 உயிர்களை குடித்துள்ளது. 4 லட்சம் மக்கள் அகதிகளாகி 270 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது செய்தி. இச்செய்தி சில கேள்விகளை எழுப்பிள்ளது.
இந்தக் கலவரத்தில் யார் லாபமடைந்தார்கள்? எப்படி லாபமடைந்தார்கள்? இதன் பின்னணி என்ன?
அந்நிய ஊடுருவல் 
வடகிழக்கில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் அசாம். பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகள் பாய்ந்து வண்டல் பரப்ப, அமுதசுரபியாக விளங்கும் இம்மாநிலம், பல பழங்குடிகளின் இருப்பிடமாகும். 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 84.55% அசாமியர்கள் ஹிந்து /பாரம்பரிய மலைவாழ் சமய நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இவர்கள் 65.4% ஆக குறைந்து, 1901 ல் 15% ஆக இருந்த முஸ்லீம்கள் 2001 ல் 31% ஆக உயர்ந்து விட்டனர். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?
அசாம் மாநிலம், வங்கதேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. வங்தேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி அசாமில் குடியேறத் தொடங்கினர். தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் முஸ்லிம்களின் ஓட்டுக்காக, இந்த ஆக்கிரமிப்புக்குத் தூபம் போடுகின்றன. இந்த ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்களில் போடோ பழங்குடிகளும் அடங்குவர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Tibeto-Burman பிரிவைச் சேர்ந்த, போடோ மொழியை தாய் மொழியாகக் கொண்ட இனத்தவர்கள் சுமார் 13 லட்சம் பேர். இவர்கள் கொக்ரஜார், பஸ்கா, சிராங், உடல்குரி மாவட்டங்களின் பூர்வகுடிகள். இந்த ஊடுருவலால் பூர்வ குடிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, அவர்களுடைய பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியம் அழியும் நிலை ஏற்பட்டு விட்டது.
தேசிய அபாயம்
வங்கதேச ஊடுருவல் கட்டுக்கடங்காமல் போவதையும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை அவர்கள் தட்டிப்பறித்துக்கொள்வதையும் கண்ட போடா மக்கள் கோபம் கொண்டனர். சொந்த மண்ணில் இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்பட்ட நிலையில், போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையை அடைந்தனர்.
ஐரோப்பிய-அமெக்க ஆதரவு பெற்ற கிறிஸ்தவ மிஷினரிகள், போடோ மக்களின் போராட்டத்தைப் பாரதத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டமாகத் திருப்பும் முயற்சியில் வெற்றி பெற்றனர். இதன் விளைவாக, போடோ இனமக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 9.4% போடோக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர். உண்மமையில் இது 15% இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த போடோ புரட்சி அமைப்பில் ஒன்று National Democratic Front of Bodoland. இது கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த அமைப்பு.  உல்ஃபா போன்ற பிரிவினைவாத அமைப்புடன் தொடர்புடையது. இந்த அமைப்பு, போடோ பகுதிகளை பாரதத்திலிருந்து பிரித்து தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிகையை முன் வைத்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தடை செய்யப்பட்ட ஒரு நாசகார அமைப்பு.
2003ம் ஆண்டு, 3082 கிராமங்களை உள்ளடக்கிய போடோ டெரிடோரியல் கவுன்சில் என்ற சுயாட்சி பகுதி அடல்பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் ஏற்ப்படுத்தப்பட்டது. போடோ லிபரேஷன் டைகர்ஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பினர் சுமார் 2500 பேர் அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினர். இதில் பெரும்பாலானோர் மத்திய ரிசர்வ் காவல் படையில் வேலையில் அமர்த்தப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ஜனநாயக வழிக்கு வரமாட்டோம் என்று சொல்லி, இன்றும் நம் நாட்டுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது மேலே கண்ட போடோலாண்ட் அமைப்பு.
ஓட்டு வங்கி அரசியல் அபாயம்
1947-ல் பாரதம் விடுதலை அடைந்த பின்னர் தான், வட கிழக்கு மாநிலங்களில் கல்வி பரவலாக்கப்பட்டது. இதன் விளைவாக, வாய்ப்பு தேடி நுழையும் வெளி மாநிலத்தவர்களை  எதிர்த்து உள்ளூர் மக்கள் போராடத் தொடங்கினர்.  அசாமில் நடந்ததும் இதுதான். உள்புகுந்த வங்கதேச முஸ்லிம்களை குடியமர்த்த ஏதுவாக Illegal Migrants (Determination by Tribunal) – IMDT என்ற  சட்டத்தை 1983ல் அசாம் மாநிலத்துக்கு மட்டும் பொருந்தும்படிகொண்டு காங்கிரஸ் வந்தது. காரணம், அவர்களுடைய ஓட்டு வங்கி.
இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக்கப்படும் போது அசாமிலிருந்து ஓர் உறுப்பனர் கூட நாடளுமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1983 முதல் 2005 வரை பல லட்சம் வங்கதேச முஸ்லிம்கள், இந்தியக் குடிமகன்களாக நம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.  இவர்கள் அசாமின் பண்பாடு, மொழி போன்றவற்றை அழித்துவிட்டனர் என்று சுட்டிக்காட்டி இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் 2005-ல் ரத்து செய்தது.
அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிந்தே கொண்டுவரப்பட்ட சட்டம் இது. 2004ல் வாஜ்பாய் ஆட்சி முடிவுக்கு வந்து, 2005ல் உச்ச நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்த குறுகிய ஓராண்டு காலத்துக்குள் அசாமின் வாக்காளர் எண்ணிக்கை 15.1% ஆக உயர்ந்தது.
ஆக அசாம் அரசியலின் மூன்று கதாநாயகர்கள், வெளிநாட்டு முஸ்லிம்கள், பிரிவினையைத் தூண்டி மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஓட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள்.
குடியுரிமை கிடைக்கப்போகிறது
இந்தக் கலவரத்தில் அகதிகளாக்கப்பட்ட 4 லட்சம் பேரில் 2.5 லட்சம் பேர் முஸ்லீம்கள். இந்த 2.5 லட்சம் முஸ்லிம்களும் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் ஊடுருவியவர்கள். இவர்கள் அனைவரும் இப்போது இந்தியக் குடிமக்களாகப் போகிறார்கள். இவர்கள் யார் என்று யாரும் இப்போது கேள்வி கேட்கப்போவதில்லை. இதற்கான அடித்தளம் இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. ‘அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களை மாநில அரசால் காப்பாற்ற முடியாது. எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பக்கை இல்லை’ என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரஹுமான் கான் தலைமையில் பல கட்சிகளை சார்ந்த முஸ்லீம் எம்.பிக்கள் குழு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து ஜூலை 26 அன்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி ஒரு முஸ்லிம் குழு அசாம் செல்ல வேண்டுமாம்.
இதே ஜூலை 26 அன்று மும்பையில் முஸ்லிம்களின், அரசு சாரா நிறுவனங்களின் கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் அசாமில் முஸ்லிம்கள் இன அழிப்பு செய்யப்படுகிறார்கள் என்றும், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதே கிராமங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் கலவரத்தில் நவீன ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை வங்கதேசத்திலிருந்து படகுகள் மூலம் அசாமுக்குள் எடுத்துவரப்பட்டதாக போடோ தலைவர்கள் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தனர். இதை உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்களும் உறுதி செய்தனர். ஆனால் இந்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் ஜூலை 25 அன்று இந்தக் கலவரத்தில் எந்த அந்நியத் தலையீடும் இல்லை என்றும், சர்வதேச எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதால் யாராலும் அசாமில் நுழைய முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்தப் பேட்டிகளும் கோரிக்கைகளும் டெல்லியிலும் மும்பையிலும் அரங்கேறும்போது, கலவர பூமியான அசாம் மோகன்பூர் மற்றும் சோனாரிப்பூரில் பாகிஸ்தான் கொடி பரப்பதை டைம்ஸ் நௌ என்ற ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒளிபரப்பியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி இந்திய முஸ்லிம்கள் ஏன் பாகிஸ்தான் கொடி ஏற்றவேண்டும்? பாகிஸ்தான் அந்நிய நாடில்லையா? இவர்கள்தான் அப்பாவி முஸ்லிம்களா?
இவர்களைக் காப்பாற்றி, இந்திய வம்சாவளி போடோக்களைத் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் கோருகிறார்கள். இவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கின்றன முஸ்லிம் அரசு சாரா அமைப்புகள். வெளிநாட்டுத் தலையிடு இல்லை என்கிறார் உள்துறைச் செயலாளர்.  ஜூலை 29 அன்று அசாம் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், 300 கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குடிஅமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்துவிட்டார்.
ராணுவத்தை அவமதித்த முதல்வர்
கலவரத்தை அடக்க துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் தருண் கோகாய் தவறிவிட்டார் என்ற புகார் வந்ததும், ராணுவத்தின் மீது பழியைத் திருப்பிவிட்டார் முதல்வர். ராணுவம் சரியான நேரத்தில் வந்திருந்தால், கலவரத்தை அதிகம் பரவவிடாமல் கட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்கிறார். அவர் அழைத்து ராணுவம் வரவில்லை என்றால், வங்கதேசத்தினர் ஆபத்தானவர்கள் என்று ராணுவம் கருதுகிறதா?
எந்த இனம் அழியப் போகிறது?
வங்கதேச அந்நிய முஸ்லிம்கள், இப்போது அநாதைகள் என்ற போர்வையில் குடியமர்த்தப்படுவார்கள். கலவரத்தால் பாதிக்கப்பட்ட போடோக்களோ அக்கிரமக்காரர்களாக இனம் காட்டப்படுவார்கள். அகதிகள் முகாமிலிருக்கும் 1.5 லட்சம் போடோக்கள் அநாதைகளாக இருப்பார்கள். அவர்கள்மீது வழக்கு தொடரப்படும். அரசியல் கட்சிகளோ ஓட்டுக்காக, மைனாரிட்டி என்ற பெயரில் முஸ்லிம்களைத் திருப்திபடுத்துவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். பாவம் அந்த 59 ஜீவன்கள்!

கருத்துகள் இல்லை: