விமானம் மூலம் அழைத்துவரப்படுகிறார்
கடந்த சில தினங்களுக்கு
முன்பு நித்தியானந்தாவின் அழைப்பின் பேரில், அருணகிரிநாதர்
கொடைக்கானலுக்கு சென்றார். அங்கு சென்று நித்தியை சந்தித்துவிட்டு
மதுரைக்கு திரும்பியது முதலே, அருணகிரி பெரும் குழப்பத்தில் இருந்து
வந்தார் என்றும், அதனாலேயே கடந்த இரண்டு தினங்களாக சரிவர உணவருந்தாமல்
இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதீனம்
அருணகிரிநாதருக்கு இன்று (27.8.2012) மதியம் உடல் நிலைமிகவும் மோசமாகியது.
மடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக
அவரை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இன்று இரவு
9 மணிக்கு மதுரயில் இருந்து புறப்படும் விமானம் மூலம் சென்னை வருகிறார்.
இரவு 11 மணிக்கு அவர் சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக