வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு புதிய நீதிபதி

பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா விசாரித்து வந்தார். அவரது நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் மல்லிகார்ஜுனய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைந்தது. இந்த வழக்குக்காக இவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீட்டிக்கப்படவில்லை.
அவருக்குப் பதிலாக, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூர் சிறப்பு நிதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சோமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கான உத்தரவை கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பெரும் இழுத்தடிப்பு வேலைகளைச் செய்து வருவதாகக் கூறி அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா ஏற்கனவே விலகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: