திங்கள், 9 ஜூலை, 2012

மாணவியை சிறுநீர் குடிக்கவைத்த வார்டன் மேற்கு வங்கம்

விடுதியில் தங்கியிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, படுக்கையில் சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த வார்டன், அந்த மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம், பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேற்கு வங்கம், மக்ராம்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் மிஸ்திரி. இவரின் மகள் அஜிதா . இவள் தன் கிராமத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள, சாந்திநிகேதன் பகுதியில், விஸ்வபாரதி பல்கலைக் கழக கட்டுப்பாட்டிலுள்ள, பாத பவன் உறைவிட மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவள் அங்குள்ள கராபி மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். இவள், கடந்த வெள்ளியன்று இரவு தூங்கும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டாள்.இதை அறிந்த விடுதி வார்டன் ஆத்திரமடைந்து, நேற்று முன்தினம் காலை மாணவியை அழைத்து வலுக் கட்டாயப்படுத்தி, அவளது சிறுநீரை குடிக்க வைத்தார்.



இந்நிலையில், மாணவியின் தாயார், நேற்று முன்தினம் இரவு, விடுதி வார்டனை தொடர்பு கொண்டு, தன் மகள் எப்படி இருக்கிறார் என விசாரித்துள்ளார்.அப்போது அவரிடம், "உங்கள் மகள் நலமாக இருக்கிறார். ஆனால், படுக்கையில் சிறுநீர் கழித்ததால், அவளுக்கு சிறுநீர் குடிக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது' என்று, வார்டன் தெரிவித்தார்.
பதறிப்போன மாணவியின் தாய், தன் உறவினர்கள் சிலருடன் நேற்று முன்தினம் இரவு, விடுதிக்குள் நுழைந்து, தன் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின், மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்த, பல்கலைக் கழகம் சார்பில், நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி, விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

விசுவபாரதி பல்கலைக் கழக அதிகாரிகள் இதுபற்றி, "மாணவியை சிறுநீர் குடிக்குமாறு விடுதி காப்பாளர் வற்புறுத்தவில்லை. மாறாக, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, மாணவியை அவளது படுக்கை விரிப்பை நாக்கால் நக்கி சுத்தம் செய்யச் சொன்னார். இது தான் நடந்தது' என்றனர்.இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;

கருத்துகள் இல்லை: