வெள்ளி, 13 ஜூலை, 2012

நடிகை நயன்தார டைரக்டர் ஆகிறார்

நடிகை நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில்அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
கவும்சினிமாவிற்கு முழுக்கு போட்டு சென்றவர் மறுபடியும் வந்ததிலிருந்து பல பிரபல இயக்குனர்களின் படங்களை மறுத்து வந்த நயன்தாரா சட்டென விஷ்ணுவர்தன் படத்தில் ஒப்புக்கொண்டது ரசிகர்களுக்கு அந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நயன்தாரா படப்பிடிப்பிற்கு வந்து நடித்து முடித்துவிட்டு உடனே   சென்றுவிடுவதில்லையாம்.   படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருந்து விஷ்ணுவர்த்தனின் அசிஸ்டண்ட் டைரக்டராகவே  வேலை செய்துகொண்டிருக்கிறாராம்.
தனது சினிமா வாழ்க்கையில் முன்னேறி இயக்குனராகவேண்டும் என்ற நயன்தாராவின் கனவு கூடிய விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் படக்குழுவினர். அவ்ளோ ஈடுபாட்டோட செய்றாங்களாம்

கருத்துகள் இல்லை: