வியாழன், 11 ஆகஸ்ட், 2011

ராஜரத்தினத்தைப் போல சட்டத்தை மீறி யவர்கள் கிடையாது. அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள்

இராஜரத்தினத்திற்கு அதிகபட்ச சிறை தண்டனை அளிக்க வேண்டும்
இராஜ் இராஜரத்தினத்தின் பரவலான குற்ற நடவடிக்கைகளுக்காக அதிகபட்ச சிறைத்தண்டனையான 24 வருடம் 6மாத சிறைத்தண்டனை அளிக் கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக் கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். நிதிநிறுவன மேலாளரான இராஜ் ராஜரத்தினத்தின் வழக்கறிஞர்கள், நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படுமா னால் அவரது உடல் நலம் பாதிக்கப்படும். ஒரு வேளை அது மரண தண்டனையாகக் கூட மாறிவிடும் என்று தெரிவித்துள் ளனர். இராஜ் இராஜரத்தினம் பல்வேறு வகை யான நோய்களினால் பாதிக்கப்பட்டுள் ளார் என அவரது வழக்கறிஞர்கள் குறிப் பிட்டனர். இலங்கையில் பிறந்தவரான இராஜ் ராஜரத்தினம் உள்நாட்டில் சட்டவிரோ தமான வர்த்தகத்தின் நவீன முகமாவார். இதுவரை பிடிபட்டவர்களுள் இராஜ் ராஜரத்தினத்தைப் போல சட்டத்தை மீறி யவர்கள் கிடையாது என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: