புதன், 1 நவம்பர், 2017

புல்லட் ரயில் வழித்தடம் நஷ்டத்தில் இயங்குகிறது! ரயில்வே நிர்வாகம் தகவல்

விகடன் : கார்த்திக்.; புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் அகமதாபாத் முதல் மும்பை வரையிலான வழித்தடம் நஷ்டத்தில் இயங்கிவருகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அகமதாபாத் முதல் மும்பை வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சேர்ந்து அடிக்கல்நாட்டினர். இந்த நிலையில், அகமதாபாத்-மும்பைக்கிடையேயான வழித்தடம் குறித்து சமூக செயற்பாட்டாளர் அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரயில்வேயிலிருந்து தகவல் பெற்றுள்ளார்.

அதில், அகமதாபாத்-மும்பைக்கிடையேயான வழித்தடம் 30 கோடி ரூபாய் வரை நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த 3 மாதங்களாக 40 சதவிகித இடம் காலியாகவே இருக்கிறது. இந்த வழித்தடத்தில் படுக்கை வசதி சீட்களே பெரும்பாலும் முன்பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான உயர்ரக சீட்கள் காலியாகவே உள்ளது' என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. இந்த வழித்தடம் நஷ்டத்தில் இயங்கும்போது, புல்லட் ரயில் திட்டம் லாபகரமாக இயங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: