செவ்வாய், 31 அக்டோபர், 2017

எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நன்றி'! அரசை சாடிய கனிமொழி

tamilthehindu :தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள திமுக எம்.பி கனிமொழி இது தொடர்பாக அரசை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவு: "தற்போதுதான் பருவமழை துவங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதி. எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள வள்ளூர் அனல்மின் நிலையம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் காமராஜர் துறைமுகத்திற்கு நன்றி" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எண்ணூர் கழிமுகத்தை தூர்வார வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில், நடிகர் கமல்ஹாசனும் எண்ணூர் கழிமுக பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்பைச் சுட்டிக் காட்டி கனிமொழியும் கருத்து பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: