
அப்போது மேற்கு வங்காள அரசு சார்பாக ஆஜராகி வாதிட்ட மூத்த வக்கீல் கபில்சிபல், “மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களுக்கான மானியத்தை மாநில அரசுதான் வழங்கி வருகிறது. அதனால் மேற்கு வங்காள அரசின் தொழிலாளர் துறை இந்த வழக்கை தொடர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
அதற்கு, நீதிபதிகள் “மாநில அரசு ஏன் இந்த வழக்கை தொடர்ந்தது எதற்காக என்பதை எங்களுக்கு தெளிவு படுத்தி விட்டீர்கள். இது பரிசீலனைக்கு தேவைப்படும் விஷயம். ஆனால், இந்த மனுவை மாநில அரசு தாக்கல் செய்யக் கூடாது. தனிப்பட்ட நபர்தான் செய்ய முடியும்” என்று மீண்டும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை எதிர்த்து தனி நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதற்கான பதிலை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படியும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல் ஆதாரை பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த இன்னொரு வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுக்களை அடுத்த மாதம் (நவம்பர்) கடைசி வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக