செவ்வாய், 31 அக்டோபர், 2017

தயார் நிலையில் 9 தேசிய பேரிடர் குழுக்கள்

NDRF teams are getting ready to tackle the rainy situation tamloneindia : சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களை சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடசென்னை பகுதியில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.< மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ளோரையும், வெள்ள நீரில் சிக்கியுள்ளவர்களையும் மீட்பதற்காக சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய முகாம்களைச் சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
ஒரு குழுவிற்கு 45 வீரர்கள் உள்ளனர். மீட்பு பணிகளுக்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

கருத்துகள் இல்லை: