
ஆனால், நான் இதை அரசியலாக்குவதாக சொல்லி, வேண்டுமென்றே திட்டமிட்டு
தவறான பிரச்சாரம் செய்தார்கள். எனவே, அடுத்த நாளே நான், மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவை தேர்வு செய்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று, அங்கிருக்கக்கூடிய
பிரச்சினைகளை எல்லாம் நேரில் பார்த்து, மழை தொடங்குவதற்கு முன்பாக
அங்கிருந்த கழிவுநீர் காய்வாய்களை சீர்செய்து, குப்பைகளை அகற்ற வேண்டும்,
ஓரிரு நாட்களில் இந்தப் பணிகளை அரசும், மாநகராட்சியும் மேற்கொள்ளாவிட்டால்,
திமுகவினர் தங்களால் முடிந்தவரையில் அந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று
சொல்லி இருந்தேன்.
நான் பார்த்துவிட்டு வந்தபிறகு, அந்தப் பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு சீர்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நேற்றைய தினம் வந்திருக்கிறது. இதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, அந்தப் பகுதியில் மட்டுமல்ல, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்னைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அங்கெல்லாம் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஈடுபட்டிருந்தால் ஒருநாள் மழைக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது" எனக் கூறினார்.
நான் பார்த்துவிட்டு வந்தபிறகு, அந்தப் பகுதிகளில் மட்டும் ஓரளவுக்கு சீர்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நேற்றைய தினம் வந்திருக்கிறது. இதில் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, அந்தப் பகுதியில் மட்டுமல்ல, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பிரச்னைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அங்கெல்லாம் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஈடுபட்டிருந்தால் ஒருநாள் மழைக்கே ஆங்காங்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது" எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக