
ஸ்டாலின் தி: குழந்தைகளுக்காக நிலாவை அழைத்த தலைவர் எம்.சி.ராஜா!
தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் சிறந்த செய்யுள் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் ஆவார். 'ஆதிதிராவிடர் வரலாறு' எனும் நூலை இயற்றியவரான திரு. ஜே.சிவசண்முகம் பிள்ளை அவர்கள் தலைவர் ராஜாவைப் பற்றி 'இராவ்பகதூர் எம்.சி.இராஜாவின் வாழ்க்கையும் தேர்வு செய்யப்பட் எழுத்துகளும் உரைகளும்(The Life,Select Writings of Rao Bahdur M.C.Rajah, M.L.A.)' எனும் நூலை எழுதினார். 1930 இல் பித்தாபுரம் மகாராஜா கார்லைல் அவர்களின் அணிந்துரையுடன், Madras Thr Indian Publishing House LTD வெளியிட்ட அந்த நூலை முடிக்கும் போது அதன் ஆசிரியரான ஜே.சிவசண்முகம் பிள்ளை அவர்கள், தான் ராஜா அவர்களின் செய்யுள்களை படிக்காததால் 'திரு.ராஜா ஒரு கவிஞர்' எனும் தலைப்பில் இந்நூலில் தனி பகுதியை எழுத முடியவில்லை என்று வருந்துகிறார். அத்தகைய கவிஞானத்தை தலைவர் மழலையர் கல்விக்கு, எளிய மொழியில் படுத்தினார்.
'நிலா நிலா ஓடிவா' எனத்துவங்கும் மழலையர் பாடலை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம்.
பள்ளிப்படிப்பை படிக்காதவர்களுக்கும் கூட அந்த பாடலில் பரிச்சயம் உண்டு. அப்படி புகழ்ப்பெற்ற பாடலை இயற்றியதில் தலைவருக்கும் பங்குண்டு என்பதை நம் பள்ளிகள் போதித்ததில்லை. 'Kinder Gardan Room' என்னும் தலைப்பில் அவர் ஆர்.ரெங்கநாயகி அம்மையாருடன் இணைந்து மழலையர் பாடநூலை இயற்றினார். அந்த நூலில்தான் மக்களிடம் இன்றளவும் புகழ்பெற்ற 'நிலா நிலா ஓடிவா', 'கைவீசம்மா கை வீசு' போன்ற பல பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பிறகு சிலச்சில மாற்றங்களுடன் பள்ளியில் பயிற்று விக்கப்பட்டன. ஆசிரியர் பெயர் இல்லாமல் அந்த பாடல்கள் பாடத்தில் இடம் பெறக்காரணம் கல்வித்துறையிலும் கோலோச்சும் சாதியம்தான்.
இனி நம் தலைமுறை மழலைகளுக்காக நிலாவை அழைக்கும்போது ராஜாவின் வரலாற்றையும் போதிப்போம்!
பள்ளிப்படிப்பை படிக்காதவர்களுக்கும் கூட அந்த பாடலில் பரிச்சயம் உண்டு. அப்படி புகழ்ப்பெற்ற பாடலை இயற்றியதில் தலைவருக்கும் பங்குண்டு என்பதை நம் பள்ளிகள் போதித்ததில்லை. 'Kinder Gardan Room' என்னும் தலைப்பில் அவர் ஆர்.ரெங்கநாயகி அம்மையாருடன் இணைந்து மழலையர் பாடநூலை இயற்றினார். அந்த நூலில்தான் மக்களிடம் இன்றளவும் புகழ்பெற்ற 'நிலா நிலா ஓடிவா', 'கைவீசம்மா கை வீசு' போன்ற பல பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பிறகு சிலச்சில மாற்றங்களுடன் பள்ளியில் பயிற்று விக்கப்பட்டன. ஆசிரியர் பெயர் இல்லாமல் அந்த பாடல்கள் பாடத்தில் இடம் பெறக்காரணம் கல்வித்துறையிலும் கோலோச்சும் சாதியம்தான்.
இனி நம் தலைமுறை மழலைகளுக்காக நிலாவை அழைக்கும்போது ராஜாவின் வரலாற்றையும் போதிப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக